இல்லம் தேடி சித்த மருத்துவம்!

கு.அசோக்,
இல்லம் தேடி சித்த மருத்துவர்கள் கிடைக்கும் புதிய திட்டம் இம்காப்ஸ் மூலம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது - சித்த மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய மருத்துவர்கள் வேலூர் கூட்டத்தில் வரவேற்று தீர்மானம்.
வேலூர் மாவட்டம்,வேலூரில் தமிழ்நாடு சித்த மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய சித்த மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவர்களின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
வேலூர்,திருவண்ணாமலை,ராணிப்பேட்டை,திருப்பத்தூர்,திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய பகுதி மருத்துவர்கள் கலந்ந்துக் கொண்ட இக்கூட்டத்தில், இம்ப்காப்ஸ் இயக்குநர் உசேன் தலைமையேற்றர்.
இதில் டாக்டர் கண்ணன்,டாக்டர்,பாஸ்கர் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட சித்த மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் வரும் இம்ப்காப்ஸ் தேர்தலை சந்திப்பது இல்லம் தேடி நேரடியாக இம்ப்காப்ஸ் மருந்துகளை விற்பனை செய்யும் புதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கு பாராட்டும் இம்ப்காப்ஸ் நிறுத்தப்பட்ட அரிய வகை சித்த மருந்துகளை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பாராட்டும் நன்றி தெரிவித்தும் இதே போன்று இம்ப்காப்ஸ் மூலம் புதிய இருமல் டானிக் மற்றும் ஷாம்பு வலி நிவராண தைலங்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன