சிட்கோ அமைக்கப்பட உள்ள இடத்தை ஆட்சியர் ஆய்வு!

சிட்கோ அமைக்கப்பட உள்ள இடத்தை ஆட்சியர் ஆய்வு!

 ர.நி.ஆனந்தன்,

 திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி வட்டம், மல்லகுண்டாவில் சிட்கோ அமைக்கப்பட உள்ள இடத்தையும் மற்றும் கேத்தாண்டப்பட்டி திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடைபெற்று வருகின்ற கரும்பு அரைவை மற்றும் சர்க்கரை உற்பத்தி செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

  அதனை தொடர்ந்து நாட்றம்பள்ளி வட்டம் கேத்தாண்டப்பட்டி திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடைபெற்று வருகின்ற கரும்பு அரைவை மற்றும் சர்க்கரை உற்பத்தி செய்யும் பணிகளையும்,திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அமைந்துள்ள கரும்பு தளம், கரும்பு அரைவை நிலையம், கொதிகல நிலையம், ஆவியாக்கி, படிகலன் பிரிவு, சுழல் ஜல்லடை பிரிவு, சர்க்கரை மூட்டை செய்யும் இடம், சக்கரை இருப்பு வைக்கப்படும் அறை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

   மேலும் ஒருநாளுக்கு 1,250 டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. இச்சக்கரை ஆலையில் பணிபுரிகின்ற பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறித்தும், அனைவருக்கும் காப்பீட்டு செய்யப்பட்டுள்ளது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்கள்.

  இந்த ஆய்வுகளின் போது வட்டாட்சியர் திரு.குமார், கூட்டுறவு சர்க்கரை ஆலை துணை தலைமை ரசாயினர் திரு.செந்தில்குமார், துணை தலைமை பொறியாளர் திரு.கரிகாலன், தொழிலாளர் நல அலுவலர் திரு.பன்னீர்செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.முருகேசன், கரும்பு அலுவலர் திரு.வெற்றிவேந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர்.