வட்டமடித்து ஆய்வு செய்த வேலூர் ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்!

வட்டமடித்து ஆய்வு செய்த வேலூர் ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

 வேலூர் மாவட்டம் கி.வ.குப்பம் ஊராட்சி ஒன்றியம் வடுகந்தாங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (14.06.2023) பார்வையிட்டு மாணாக்கர்களுக்கு ஆசிரியர்கள் கற்பிக்கும் முறையை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் திரு.க.முனுசாமி உள்ளார்.

 அடுத்ததாக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் நடைபெற்று வரும் கூடுதல் கட்டிடங்களுக்கான கட்டுமான பணிகளையும், குடியாத்தம் வட்டம் ராமாலை ஊராட்சியில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைப்பது குறித்தும், ஏரிபுதுமனை குட்டையை அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் -  மிமி  ன் கீழ் ரூ.9.98 இலட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.அமலு விஜயன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் திரு.வெங்கட்ராமன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.திருமலை, திரு.கார்த்திகேயன் உடனிருந்தனர்.

 முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில்  வேலூர் மாவட்டத்தில் இரண்டு இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்துவது  குறித்த ஆலோசனை  கூட்டம்  ஆட்சித்தலைவர் தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் இணை இயக்குநர் (நல பணிகள்) மரு.பி.பாலசந்தர், துணை இயக்குநர் (பொதுசுகாதாரம்) மரு.பானுமதி, வேலூர் அரசு பொது மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவ கண்காணிப்பாளர் மரு.ரவிதிலகம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.மோகன் , திரு.ஆனந்தராஜ் உட்பட பலர் பலந்து கொண்டனர்.

 பின்னர், வேலூர் மாவட்ட திட்ட குழு உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி பகுதிகளை சார்ந்த  7 உறுப்பினர்கள் மற்றும் நகர்புற பகுதிகளை சாந்த  5 உறுப்பினர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பெ. குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். உடன் தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கராமமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திரு,மு,பாபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.க.ஆர்த்தி ஆகியோர் உள்ளனர்.

 மேலும், பேர்ணாம்பட்டு  வட்டம், அழிஞ்சிகுப்பம் கிராமத்தில் நடைப்பெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில்  மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆப., அவர்கள் உரையாற்றினார். ஒன்றிய குழு தலைவர் திருமதி. சித்ரா ஜனார்த்தனன், ஆத்ம குழு தலைவர் திரு.ஜனார்த்தனன், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் திரு.தனஞ்செயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 அதே போல் அழிஞ்சிகுப்பம் கிராமத்தில் நடைப்பெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில்  225 பயனாளிகளுக்கு ரூ.2.39 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கியதுடன், முகாமில்  பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை ஆட்சித்தலைவர்  பார்வையிட்டார்.

 மேலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரசின் சாதனை விளக்க  ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி புகைப்பட கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆப., அவர்கள் பார்வையிட்டார்.

  இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.அமலு விஜயன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் திரு.வெங்கட்ராமன், ஒன்றிய குழு தலைவர் திருமதி. சித்ரா ஜனார்த்தனன், ஆத்ம குழு தலைவர் திரு.ஜனார்த்தனன், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் திரு.தனஞ்செயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.