நீதிபதி சுமதி தலைமையில் குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உறுதி மொழி!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
ராஜபாளையத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழு சார்பில் தேசிய குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது. வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிபதியுமான சுமதி தலைமையில் குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
பின்னர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்ட நீதிபதி சுமதி, விழிப்புணர்வு கையெழுத்து பதாகையில் கையொப்பமிட்டார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், வேர்ல்டு விஷன் இந்தியா நிர்வாகிகள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் என பல்வேறு தரப்பினரும் விழிப்புணர்வு பதாகையில் கையொப்பமிட்டனர்.
நிறைவில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின பிரச்சார வாகனத்தையும் நீதிபதி சுமதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் கல்வி உதவி.
ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் வைத்து சிஐடியு கார் வேன் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் சங்க உறுப்பினர் குடும்பத்தில் உள்ள 2022 2023 ஆம் ஆண்டு 10ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவ மாணவிகளுக்கு
ராஜபாளையம் நகர மன்ற தலைவி பவித்ராஷியாம் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் சி ஐ டி யு டாக்ஸி சங்கத் தலைவர் தங்கவேல், சங்க செயலாளர் கண்ணன், மாவட்ட செயலாளர் தேவா, மாவட்டத் தலைவர் மகாலட்சுமி, சாலைப் போக்குவரத்து மாவட்ட செயலாளர் திருமலை, மாவட்டத் துணைத் தலைவர் கணேசன், கனவினர் சுப்பிரமணியன், டாக்ஸி சங்கத் துணைத் தலைவர் விஜயகுமார் டாக்ஸி சங்க பொருளாளர் ஐயப்பன் மற்றும் கழக நிர்வாகிகள் தோழர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.