ட்ரோன் மூலம் சாராய ஊறல் கண்டுபிடித்து அழித்த டிஐஜி!

ம.பா.கெஜராஜ்,
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர், விற்பவர் மற்றும் கடத்துபவர்களை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் எம்.எஸ்.முத்துசாமி, இ.கா.ப., மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு என்.மணிவண்ணன், இ.கா.ப., ஆகியோர் தலைமையில் பேர்ணாம்பட்டு சாத்கர் மலைப்பகுதியை சுற்றி உள்ள டங்காபள்ளம், கடம்பப்பாறை பன்னிக்குட்டிபள்ளம், நீர்முல், பால்சுண்ணை, டோபிப்பாறை ஆகிய பகுதிகளில் ட்ரோன் மூலம் சாராயவேட்டை நடத்தப்பட்டது.
அந்த வகையில், கள்ளச்சாராய ஊரல்கள் சுமார் 10,000 லிட்டர் அழிக்கப்பட்டது. இந்தத் தேடுதல் வேட்டையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு எஸ்.பாஸ்கரன், தலைமையகம் 2 ஆய்வாளர்கள், 2 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 100 காவல் ஆளினர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்கள் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.