சொல்லியும் கேட்காததால் களம் இறங்கிய அதிகாரிகள்!

சொல்லியும் கேட்காததால் களம் இறங்கிய அதிகாரிகள்!

 கு.அசோக்,

ராணிப்பேட்டை நகரத்தில் முக்கிய சாலையில் ஓரமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள  கடைகளை நெடுஞ்சாலை  கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை அதிகாரிகளின் மூலமாக அகற்றப்பட்டது.

 ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை நகரத்துக்கு உட்பட்ட ராஜேஸ்வரி திரையரங்கம் பழைய பேருந்து நிலையம் ராணிப்பேட்டை கிருஷ்ணகிரி சாலை மற்றும் கெல்லீஸ் ஆகிய சாலைகளில் வெளியே ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடை உள்ளிட்ட கட்டடங்களால் அப்பகுதிகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் இருந்து வந்தது.

 இதன் காரணமாக, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நெரிசலால் கடும் அவதிக்குள்ளாகி வந்த நிலையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

  தமிழக அரசு கட்டுமானம் மற்றும் பராமரிப்பு நெடுஞ்சாலை துறை அதிகாரியின் மூலமாக சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு கடைகள் மற்றும் கட்டிடங்களுக்கு கடிதம் அனுப்பிய நிலையிலும் கடை உரிமையாளர்கள் ஆக்கிரமிப்புகளை  அகற்றவில்லை.

  ஆகவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இன்று ஜேசிபி இயந்திரத்தின் மூலம் சாலை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள இடங்களை அகற்றி தள்ளினர்.