நறுவீ மருத்துவமனை சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான்! ஆட்சியர், எஸ்.பி.பங்கேற்பு!

கு.அசோக்,
வேலூர் மாநகராட்சியில் உள்ள நறுவீ மருத்துவமனை சார்பில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே இருந்து புறப்பட்ட இந்த ஓட்டத்தை நறுவீ மருத்துவமனையின் தலைவர் ஜி.வி.சம்பத், கொடியசைத்து துவக்கிவைத்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப. மற்றும் எஸ்.பி.எஸ்.ராஜேஷ்கண்ணா இ.கா.ப, மருத்துவமனையின் துணைத்தலைவர் திருமதி அனிதா சம்பத் மற்றும் பொது மேலாளர் திரு.எஸ்.நிதின் ஆகியோர் பங்கேற்றனர்.