கிறிஸ்துவ தேவாலயங்களை பழுதுபார்க்க அரசு நிதி உதவி! திருப்பத்தூர் ஆட்சியர் அறிவிப்பு!

கிறிஸ்துவ தேவாலயங்களை பழுதுபார்க்க அரசு நிதி உதவி! திருப்பத்தூர் ஆட்சியர் அறிவிப்பு!

 டி.முகமது இர்பான்,

   கிறிஸ்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதி உதவி வழங்குதல் - தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இ.ஆ.ப. அவர்கள் அறிவிக்கை செய்திருக்கிறார்.

  இது தொடர்பாக, அம்மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,

  தமிழ்நாட்டில் சொந்தக் கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17 ஆம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

   மேற்படி திட்டத்தின் கீழ், திருப்பத்தூர் மாவட்டத்தில் சொந்த கட்டிடத்தில் இயங்கி வரும் கிறிஸ்தவ தேவாலயங்கள் பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளுடன் தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல், குடிநீர் வசதிகள் உருவாக்குதல் போன்ற பணிகள் கூடுதலாக மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

   இந்த திட்டத்தில் நிதியுதவி பெற தேவாலயம் பதிவு செய்யப்பட்டு சொந்தக் கட்டிடத்தில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருக்க வேண்டும். தேவாலயம் மற்றும் தேவாலயம் கட்டப்பட்ட இடம் ஆகியவை பதிவுத்துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும். தேவாலயத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகள் மற்றும் தேவாலய கட்டடத்தின் வயது ஆகியவற்றை கருத்திற்கொண்டு 10-15 வருடம் வரை இருப்பின் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமும், 15-20 வருடமாக இருப்பின் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சம் வரையும், 20 வருடத்துக்கு மேல் இருந்தால் ரூ.3 லட்சத்தில் இருந்து 6 லட்சமும் நிதியுதவி வழங்கப்படும். சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டில் இருந்து எந்தவித நிதி உதவியும் பெற்றிருக்க கூடாது.

  விண்ணப்பத்துடன் தேவாலயம் கட்டடத்திற்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து வரைபடம் அனுமதி ஒப்புதல் பெறப்பட்ட ஆணை நகல் மற்றும் தேவாலயம் கட்டப்பட்ட நாள், தேவாலய கட்டடத்தின் ஸ்திரத்தன்மை சான்று உள்ளாட்சி அமைப்பு பொறியாளர்களிடம் இருந்து பெறப்பட்டிருத்தல் அவசியம். தேவாலயம் முகப்பு தோற்றம் மற்றும் பழுது ஏற்பட்டுள்ள பகுதியின் புகைப்படங்கள், தேவாலயம் சுயாதீனம் வகையாயிருப்பின் அதன் செயல்பாடுகள் குறித்து உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பெற்ற சான்று இணைத்தல் வேண்டும். தேவாலயம் வங்கிக் கணக்கு எண், வங்கியின் பெயர், கிளை, ஐ.எப்.எஸ்.சி மற்றும் எம்.ஐ.சி.ஆர் எண்கள் விவரம் ஆகிய ஆவணங்களை இணைக்க வேண்டும்.

  விண்ணப்படிவம் மற்றும் சான்றிதழை இணையதள முகவரி ஷ்ஷ்ஷ்.தீநீனீதீநீனீஷ்@tஸீ.ரீஷீஸ்.வீஸீ <லீttஜீ://ஷ்ஷ்ஷ்.தீநீனீதீநீனீஷ்@tஸீ.ரீஷீஸ்.வீஸீ> -ல் வெளியிடப்பட்டுள்ளது.

   இதனை படியிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்துடன் பிற்சேர்க்கையை பூர்த்தி செய்து உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

   மாவட்ட ஆட்சிதத்லைவர் தலைமையிலான குழு பெறப்படும் விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறிஸ்துவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குநருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.

   எனவே திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்துவ தேவலாயங்களை பழுதுபார்க்க மற்றும் புணரமைக்க இத்திட்டத்தினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்,இ,ஆ,ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.