30 நொடிகளில் 49 புஷ்அப்!

கே.ஏ.ஜெகதீஷ்வரி!
ராஜபாளையத்தை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் நோபல் உலக சாதனை முயற்சியாக, 30 நொடிகளில் ஒரு கையால் 49 முறை நாக்கில் புஷ்அப் எடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள ஸ்ரீரெங்கபாளையம் பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பவரது மகன் விக்னேஷ். இவர் சத்திரப்பட்டி சாலையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3ம் ஆண்டு மெக்கானிக்கல் படித்து வருகிறார்.
இவர் இன்று நோபல் உலக சாதனை முயற்சி மேற்கொண்டார். கல்லூரியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் நோபல் உலக சாதனை அமைப்பினர் கலந்து கொண்டனர்.
இவர்கள் முன்னிலையில், 30 நொடிகளில் ஒரு கையை உபயோகப்படுத்தி 49 முறை நாக்கில் புஷ்அப் எடுத்தார். இது புதிய சாதனையாக இது சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
சாதனை படைத்த விக்னேஷிக்கு சாதனை அமைப்பின் தலைமை செயல் அலுவலர் அரவிந்த் பதக்கத்தையும், சான்றிதழையும் வழங்கினார். இதற்காக கடந்த 2 மாதங்களாக மேலாக விக்னேஷ் கடும் பயிற்சி எடுத்துள்ளார்.