ஹலோ இதெல்லாம் இருந்தாதான் பட்டாசு கடை வச்சுக்கனும்! திருப்பத்தூர் ஆட்சியர் தகவல்!

ஹலோ இதெல்லாம் இருந்தாதான் பட்டாசு கடை வச்சுக்கனும்! திருப்பத்தூர் ஆட்சியர் தகவல்!

 ம.டெல்லிராஜன்,

  2023 தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் வெடிபொருள் சட்டம்-1884 மற்றும் விதிகள்-2008-ன் கீழ் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் விதி எண் 84 மற்றும் இதர விதிகளில் தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றி இணையதளம் வழியாக மட்டும் 24.10.2023-க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

மாவட்டத்திலுள்ள அனைத்து பொது இ-சேவை மையங்கள் வாயிலாக  விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கீழ்கண்ட விதிமுறைகளின்படி ஆவணங்களை இணைத்து பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

விண்ணப்பதாரரின் கடவுச் சீட்டு அளவு புகைப்படம்.

விண்ணப்பதாரரின் முகவரி குறித்த ஆவணம் (ஆதார் அட்டை).

அடையாள அட்டை ( வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை/ வாக்காளர் அடையாள அட்டை/ ஓட்டுநர் உரிமம்)

உரிமக் கட்டணம் ரூ.500/- அரசு கருவூல செலுத்துச் சீட்டு மூலம்.

பதிவு செய்யப்பட்ட குத்தகை ஆவணம்.

சொந்தக் கட்டிடம் எனில் மனுதாரர் பெயரில் உள்ள பட்டா (அல்லது) வாடகை கட்டிடம் எனில் வாடகை ஒப்பந்தப் பத்திரம்.

உள்ளாட்சி அமைப்பினரிடமிருந்து பெற்ற பல்வகை வரி இரசீது.

சுய உறுதிமொழிப் பத்திரம்.

கட்டிட அமைவிட வரைபடம் (அல்லது) கட்டிட திட்ட அனுமதி (கி4 அளவில்)

          மேற்படி விண்ணப்பங்களை 24.10.2023 வரை மட்டுமே இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியும். அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தை கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

          உரிமக் கட்டணம் ரூ.500/-ஐ கீழ்காணும் அரசுக் கணக்குத் தலைப்பில் மிதிபிஸிவிஷி என்ற இணையதளம் வாயிலாக செலுத்தி அதற்கான அசல் செலுத்துச் சீட்டு இணைக்கப்பட வேண்டும்.

Department Code

02301

District

Tirupathur

DDO Code

36010052

Amount Code

0070 60 103AA 22799

         மேற்படி விண்ணப்பம் ஏற்கப்பட்டதெனில் தற்காலிக உரிமத்தையும், நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான ஆணையையும் இணையதளம் மூலமாகவே மனுதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

         தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பம் அளிப்போர், பொதுமக்களுக்கு சிரமமில்லாத ஆட்சேபனையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்கவும், விபத்து இல்லாத மகிழ்ச்சியான தீபாவளி பண்டிகையினை கொண்டாடிட ஒத்துழைக்குமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்,,,ப., அவர்கள்  தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.