அரசாங்கம் மட்டும் பச்சை மரத்தை வெட்டலாமுங்களா?

அரசாங்கம் மட்டும் பச்சை மரத்தை வெட்டலாமுங்களா?

 கு.அசோக்,

 வாலாஜா  அரசு  மருத்துவமனையில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு நிழல் கொடுத்த மரத்தை வேர் அடியோடு வெட்டி சாய்த்த தேசிய நெடுஞ்சாலை பணியாளர்களால் மக்கள் வேதனைபட்டனர்.

 இராணிப்பேட்டை மாவட்டம். வாலாஜா.  டிரங்க் ரோடு, சென்னை பெங்களூர்- தேசிய நெடுஞ்சாலை உள்ளது.

  பள்ளி மாணவ மாணவிகள், கல்லூரி பெண்கள், பொதுமக்கள் வாகன ஓட்டிகள் என அனைவரும் இந்த சாலையை தினந்தோறும் கடந்து சென்று வருகின்றனர்..

 இந்நிலையில் அந்த பகுதியில் மருத்துவமனை அருகே காலை நேரத்தில் அதிக அளவில் போக்குவரத்து  காணப்படுவது வாடிக்கை. இதனால் பொதுமக்கள் தினந்தோறும் அவதிப்பட்டு வந்தனர்.

 அப்படியிருக்க தற்போது தேசிய நெடுஞ்சாலை துறையின் வாயிலாக டிரங்க் ரோட்டில் இருந்து மருத்துவமனை வரையிலான போக்குவரத்தை கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டது.

 ஆக, அங்கு மிகப்பெரிய மேம்பால பணி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அமைச்சர் ஆர் காந்தி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

  அதனைத் தொடர்ந்து, சாலையில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளான மரங்கள் மற்றும் வீடுகள் ஆகியவை அகற்றப்பட்டு வரும் நிலையில், வாலாஜா  அரசு மாவட்ட தலைமை பழைய மருத்துவமனை வளாகத்தின் உள்ளே மிகவும் பல ஆண்டுகளாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நிழல் கொடுத்து கம்பீரமாக நின்று கொண்டிருந்த இரண்டு அசோகா மரங்களை வெட்டினர்.

  சாலை விரிவாக்க செய்யப்பட உள்ளதால் தேசிய நெடுஞ்சாலை பணியாளர்கள் மனம் இறக்கமே இல்லாமல் ராட்சச இயந்திர உதவியுடன் மரத்தை வேரோடு வெட்டி சாய்த்தனர்.

  இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.