இயற்கை வளங்களும் செயற்கை குடிநீரும்!

இயற்கை வளங்களும் செயற்கை குடிநீரும்!

  எம்.ரபிக் ராஜா,

தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை வளங்கள் சூழ்ந்த பகுதி பெரியகுளம் பகுதியாகும்.

 குடிநீருக்கு பெயர் போன இப்பகுதி தற்காலிகமாக செயற்கை குடிநீரை நம்பி உயிர் வாழ வேண்டிய சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

 இந்த ஆண்டு முழுவதும் நல்ல மழை பெய்த காலங்களில் உரிய முறையில் நடவடிக்கை எடுத்து குடிநீரை சேகரித்து வைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தவறிவிட்டனர்.

 இதனால் பொதுமக்கள் ரோட்டில் நின்று ஆர்ப்பாட்டம் போராட்டம் போன்ற விஷயங்களை கையில் எடுக்கத் துவங்கி விட்டனர்.

 அதிகாரிகளின் அலட்சியமான பதிலால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.             ஆனால் தற்சமயம் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது, என்பதை எண்ணி பெரியகுளம் பகுதி பொதுமக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

 இயற்கை வளங்களை பாதுகாக்க ஒரு கூட்டம் அலைகின்றது இயற்கை வளங்களை அழிக்க ஒரு கூட்டம் அலைகின்றது அதை பாதுகாக்கும் கடமை பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் தவறிவிட்டது என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

  குறிப்பு:-இல்லாத குடிநீரை சுத்தம் செய்வதாக நகராட்சி நிர்வாகம் நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறது.