அவமானம் நம்மை வலிமையாக்கும்:- கலைமாமமணி நடிகை ரோகினி பேச்சு!

நூ.பிலால்,
வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில், மாணவிகள் பேரவை குழுவை கலைமாமணி நடிகை ரோகினி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் கல்லூரி பேரவை குழு துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தலைவர் விமல்சன் ஜெயின், கல்லூரி செயலாளர் லிக்மிசந் ஜெயின், கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர் லலித் குமார் ஜெயின் ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் எம்.இன்பவள்ளி, மக்கள் தொடர்பு அலுவலர் பி.சக்தி மாலா ஆகியோர் முன்னிலை வைத்தனர். தமிழ் துறை தலைவர் பாலசுப்பிரமணி சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலைஞர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர், கலைமாமணி நடிகை. ரோகிணி கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி பேரவையை தொடக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பெண்களுக்கு கல்வி அவசியம், பகுத்தறிவு திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். நான் யார் என்று புரிதல் வேண்டும், உன் திறமை என்ன, உன் தேவை என்ன என்பதை அறிந்து சுயமரியாதை உடன் வாழ்க பழகுங்கள், அவமானம் நம்மை வலிமையாக்கும் நம்முடைய செயலுக்கு மிகப்பெரிய வீச்சு உள்ளது என்பதை தெரிந்து செயலாற்றுங்கள், நம்மால் எது முடியும் என்பதை நாம் தான் தீர்மானித்து பயணிக்க வேண்டும். மாணவியாகிய நீங்கள் அனைவரும் சூரியனைப் போல ஜொலிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று பேசினார்.
தொடர்ந்து பேரவைக்குழு கல்லூரி மாணவர் தலைவர் ஆர். ஹிமானி, துணைத் தலைவர்கள் ஜி.வி.சாருமதி, நாதியா சையத் மற்றும் அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் பேரவை நிர்வாக குழு உறுப்பினர்களுக்கும் பேட்ச்சை அணிவித்து உறுதிமொழி ஏற்றிவைத்தார்.
நிகழ்ச்சி தொகுப்புகளை கல்லூரி மாணவிகள் சந்திஷனி, நாதியா சையத் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.