காலி அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்ப கோரி போராட்டம்!

காலி அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்ப கோரி போராட்டம்!

  ஜி.கே.சேகரன், 

  வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் ஒட்டுமொத்த தற் செயல் விடுப்பு எடுத்து உண்ணாவிரத போராட்டம்

 வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வருவாய்த்துறை அலுவலர்கள் ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்பு எடுத்தனர் இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது மேலும் ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் தலைவர் ரமேஷ்  தலைமையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஜோஷி ,சேகர்,உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 இந்த உண்ணாவிரத போராட்டத்தில் துணை வட்டாச்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்கள் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை உடனே வெளியிட வேண்டும். மேலும் இளநிலை வருவாய் ஆய்வாளர் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையை விதித்திருந்த ஆணையினை உடனே வெளியிட வேண்டும்.

  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும் இளநிலை உதவியாளர்கள் தட்டச்சர் ஆகியோருக்கிடையே ஒருங்கிணைந்த முதுநிலை நிர்ணயம் செய்வதில் ஏற்படுத்தப்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்து மனித வள மேலாண்மை துறை மூலம் தெளிவுறை வழங்க வேண்டும்.

  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்,  அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாச்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மைக்கு என சிறப்பு பணிகள் மற்றும் கலைக்கப்பட்ட 97 பணிகளை மீண்டும் வழங்க வேண்டும்.

   வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை தகுதியற்ற ஈப்புகளை கழிவு செய்து அவற்றிற்கு ஈடாக புதிய ஈப்புகள் வழங்க வேண்டும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பணிகளை தொய்வின்று மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீட்டினி உடனே வழங்கிட வேண்டும் உங்கள் ஊரில் உங்களை தேடி மக்களுடன் முதல் மக்களின் முகவரி போன்ற அரசு திட்டபணிகளில் அதீத பணி நெருக்கடி அளிக்கபடுவதை தவிர்த்து திட்ட பணிகளை செம்மையாக மேற்கொள்ள உரிய கால அவகாசம் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி உண்ணாவிரதம் செய்துள்ளனர்.