போதை கலந்த ஐஸ்கிரீம்! பெற்றோர்களே உஷார்!

ஜானி,
போதை வஸ்த்துக்களுக்கு முழு தடை போடப்பட்டிருக்கும் நிலையிலும்,பல இடங்களில் பல அவழிகளில் போதை டேஸ்ட் கிடைத்து வருகிறது.
குறிப்பாக சென்னை,கோவை,திருச்சி,மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் முளைத்துள்ள நவீன ஐஸ்கிரீம் கடைகளில் விற்கப்படும் ஐஸ்களில் லைட்டாக போதை பொருள் கலந்து விற்கிறார்களாம்.
கஷ்டமர்களை பிக்கப் செய்வதற்காக இந்த ஏற்பாடாம். அதனால் தான் இப்படிப்பட்ட ஐஸ்ஸை சாபிடுபவர்கள் திரும்ப திரும்ப அவற்றை வாங்கி உண்கிறார்கள்.
இந்நிலையில் தான் கோவை அவினாசி சாலை லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகம் ஒன்றில் ரோலிங் டப் கபே என்ற தனியார் ஐஸ்கிரீம் கடையில் மது பானம் கலந்து ஐஸ் கிரீம்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தது.
புகாரைத் தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தமிழ்செல்வன் தலைமையிலான குழுவினர் அதிரடியாக கடையில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் மது பாட்டில்கள் மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
இதனையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவின்பேரில் கடையின் உரிமத்தை ரத்து செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடைக்கும் அதிரடியாக சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். என்னதான் சீல் வைத்தாலும் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மீது கவனம் வைக்க வேண்டும்.
சுகாதாரத்துறை அலுவலர்கள் மாநிலம் முழுவதும் ஒரு செக்கப் செய்துவிட்டால் நல்லது தானே.