புடவையை அவிழ்த்த திமுகவினர்! மானபங்கம் படுத்தப்பட்ட ஊராட்சி பெண் கவுன்சிலர்

புடவையை அவிழ்த்த திமுகவினர்! மானபங்கம் படுத்தப்பட்ட ஊராட்சி பெண் கவுன்சிலர்

   கே.ஏ.ஜெகதீஷ்வரி,

   பொதுஜனங்கள் மத்தியில்,ஊராட்சி பெண் கவுன்சிலரின் புடவையை அவிழ்த்து அவரை மானபங்கம் படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

   தென்காசி மாவட்டம் புளியரையில் உள்ள மொத்தம் 12 உறுப்பினர்களில் 8 உறுப்பினர்கள் அதிமுகவிற்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி அதிமுகவினரை உள்ளே சென்று வாக்களிக்க விடவில்லை. இதனால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. மேலும் இரு தரப்பினரும் காவல்துறையினர் கட்டுப்பாட்டை மீறி உள்ளே சென்று மோதிக்கொண்டனர்.

  அதிமுகவைச் சேர்ந்த வேட்பாளர் சரவணன் திமுகவைச் சேர்ந்த வேட்பாளர் குருமூர்த்தி ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

  அதிமுகவைச் சேர்ந்த 8 கவுன்சிலர்கள் வாக்களிக்க செல்லும் போது, அவர்களை திமுகவைச் சேர்ந்த  4 உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

  உறுப்பினர்களுடைய கைகலப்பு ஏற்பட்டது. திமுக வை சேர்த்த உறுப்பினர்கள் அதிமுக பெண் உறுப்பினர்களின் புடவையை அவிழுத்து மணபங்கம் படுத்தினர்.

 இதனால் பதற்றம் ஏற்பட்டது, ஆகவே துணை தலைவர்க்கான தேர்தல் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 அதிமுகவினர் தாக்கப்பட்டதை அறிந்த தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா தமிழக கேரள தேசிய நெடுஞ்சாலை எல்லையான புளியரையில் தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார்.

 இதனால் சுமார் ஒரு மணி நேரம் தமிழக கேரள எல்லைப் பகுதியான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

  பின்னர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் முறைப்படி தேர்தல் முறையாக நடைபெறும் மற்றும் பாதிக்கப்பட்ட அதிமுகவினருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்து தன் பெயரில் சாலை மறியல் போராட்டம்  முடிவுக்கு வரப்பட்டது.