ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பி.எஸ்.ஆஜர்!

ஜி.எஸ்.மேத்யூராஜ்,
முன்னாள் முதல்வர் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னிர்செல்வம் ஆஜர் ஆனார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு இறந்தார்.
அவரது மரணம் குறித்த சந்தேகம் இருப்பதால் இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ்.கோரியிருந்தார்.
அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
ஆணையம் தம் பணியை துவங்கி பலதரப்பினரிடம் விசாரித்து முடித்துள்ளது.
ஆனால் கோரிக்கை விடுத்த ஓ.பி.எஸ் அவர்களிடம் விசாரிக்கவேயில்லை .
அவர் ஒத்துழைக்காகதே அதற்கு காரணம்.
இந்நிலையில் இன்று ஆணையத்தில் ஆஜராவதாக கூறப்பட்ட நிலையில் ஓ.பி.எஸ். இன்று ஆஜரானார்.
அதிமுக தொண்டர்கள் அங்கு கூடி ஆராவரம் செய்தனர்.