செந்தில் பள்ளி மாணவி தள்ளிவிடப்பட்டாரா?

எஸ்.முனிசாமி,
தனியாருக்கு சொந்தமான செந்தில் பள்ளிட மாணவியை கொலை செய்யும் நோக்குடன் யாராவது தள்ளிவிட்டனரா என்கிற கோணத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், அவர் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
இது பற்றின விவரம் வருமாறு,
தர்மபுரி கலெக்டர் மற்றும் எஸ்.பி பங்களா அருகே உள்ளது செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, இந்த பள்ளியில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த லோகேஸ்வரி(17) வயது என்ற மாணவி அப்பள்ளியிலுள்ள
விடுதியில் தங்கி பிளஸ்டூ படித்து வந்தார்.
இந்நிலையில் லோகேஸ்வரி, அவர் தங்கியுள்ள விடுதியின் 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற போது கால்முறிவு ஏற்பட்டதுடன், உடலில் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டது.
அவர் தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் சம்மந்தப்பட்ட பள்ளியில் பிளஸ்டூ மாணவி தற்கொலைக்கு முயன்றதற்க்கான காரணம் குறித்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவியிடம், தர்மபுரி மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி வனிதா அவர்கள் நேரில் விசாரணை நடத்தினார்.
இதனை தொடர்ந்து பிளஸ்டூ மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்ததற்க்கான காரணம் குறித்தும், மாற்றாக வேறு யாராவது மாடியில் இருந்து மாணவியை தள்ளி விட்டார்களா என்பது குறித்த பல்வேறு கோணங்களிலும், பள்ளி வளாகத்தில் உள்ள சிசிடி கண்காணிப்பு பதிவு ஆதாரங்களை கொண்டும் அதியமான்கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்படியிருக்க தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் தனியார் பள்ளி பிளஸ்டூ மாணவி மேல் சிகிச்சைக்காக தற்போது கோவை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்றிட அழைத்து செல்லப்பட்டார்.