அடேங்கப்பா....நூறு பெண்களை கற்பழித்த ஐ.டி. ஊழியர்!

அடேங்கப்பா....நூறு பெண்களை கற்பழித்த ஐ.டி. ஊழியர்!

  வித்யா,

  முப்பது வயதான வாலிபர் இதுவரை நூறு பெண்களை கற்பழித்திருக்கிறானாம்.  மேற்படி காமுகன் தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியை சேர்ந்தவன். அவனது பெயர் அஜய்.

 ஹைதராபாத்தில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வரும் அஜய் அவனது இன்ஸ்டாகிராம் பேஜ் மூலம் பல பெண்களுடன் பழகி வந்துள்ளான். அப்போது அந்த பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறுவானாம். இதனை நம்பிய பெண்கள் அவர்களது போட்டோவை அவனுக்கு அனுப்பினர். அதனை வைத்து பெணகளின் அழகை வர்ணித்து ஆபாசமாக பேசி வலையில் விழவைப்பானாம்.

அவனது ஆசை வார்த்தையை நம்பிய பெண்கள் தங்களுடைய நிர்வாண படம், குளியல் காட்சிகளை அஜய்க்கு அனுப்பியுள்ளனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அஜய் நிர்வாண வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி பெண்களை வரவழைத்து கற்பழித்துள்ளான்.

 அவனது வலையில் சிக்கிய சிறுமிகள், கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள், குடும்ப பெண்கள் மற்றும் அரசு பெண் அதிகாரிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அஜயால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

 அஜயிடம் சிக்கிய பெண்கள் மானத்திற்கு பயந்து போலீசில் புகார் தராததால் மேலும் மேலும் பல பெண்களிடம் அத்துமீறியுள்ளான் தெரியவந்துள்ளது.

 இருப்பினும், ஒரு சில பெண்கள் துணிந்து ஐதராபாத்தில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

  போலீசார் அவனை ரகசிய விசாரணை நடத்தியதில் பெண்களிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஐதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து அஜயை கைது செய்துள்ளனர்.