ஜார்காண்ட் மாநில ரவுடி சி.எம்.சி மருத்துவமனையில் கைது!

ஜார்காண்ட் மாநில ரவுடி சி.எம்.சி மருத்துவமனையில் கைது!

  ஜி.கே.சேகரன்,

கொலை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடபட்டு வந்த தலைமறைவாக இருந்த ஜார்காண்ட் மாநில பிரபல ரவுடி சி.எம்.சி மருத்துவமனையில்  கைது செய்யப்பட்டான்.

வேலூர்மாவட்டம்,வேலூரில் உள்ள சி.எம்.சி - கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராம்பிரசாத் யாதவ் (54) என்பவர் தனது மகன் வீரேந்திர நாத் குமார் (36) என்பவருடன் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

 வீரேந்திர நாத் குமார் என்பவர் ஜார்கண்ட் மாநிலத்தில் பிரபல ரவுடி ஆவார்.

 இவர் மீது கொலை கொள்ளை வழிபறி ஆட்கள் கடத்தல் உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட வழக்குகளில் நிலுவையில் உள்ளது.

  இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீரேந்திரநாத் குமார் தப்பிதலைமறைவாகி சி.எம்.சி மருத்துவமனையில் தனது தந்தையுடன் இருந்து வந்துள்ளார்.

  இதனை அவரின் கைபேசி எண்ணை வைத்து கண்டறிந்த ஜார்கண்ட் காவல்துறையினர் இன்று வேலூர் வடக்கு காவல்துறையினருடன் இணைந்து சி.எம்.சி மருத்துவமனையில் தங்கியிருந்த வீரேந்திரநாத் குமாரை கைது செய்து அழைத்து சென்றனர்.

 இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பலத்த பாதுகாப்புடன் ஜார்கண்ட் காவல் ஆய்வாளர் பாபுலால் தலைமையிலான போலீசார் கைது செய்யப்பட்ட ரவுடி வீரேந்திர நாத் குமாரை ஜார்கண்ட் அழைத்து சென்றனர்.