மீண்டும் பிடிபட்ட யூடியூபர் மாரிதாஸ்!

மீண்டும் பிடிபட்ட யூடியூபர் மாரிதாஸ்!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,

யூடியூப் புகழ் மாரிதாஸ் தற்போது கைது புகழ் மாரிதாஸாக மாறி வருகிறார்.

  மாரிதாஸ்,இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணத்தையொட்டி பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

 அப்படி தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த சூடு ஆறுவதற்கு உன் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

 நெல்லை மேலப்பாளையத்தில் கடந்த 04.04.2020 அன்று காதர் மீரான் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் 292, 295 , 505 ( 2), தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67, என நான்கு பிரிவுகளில் யூடியூபர் மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்யபட்டிருந்தது.

 இன்று அவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மாரிதாஸ், நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.