அரசு கொடுத்த நிலங்களை ஆட்டையை போட்ட நிலச்சுவாந்தார்! மீட்டுதரக்கோரி மக்கள் போராட்டம்!

ஜி.கே.சேகரன்,
சிலோன் காலனி பகுதியில் அரசு கொடுத்த நிலங்களை ஆட்டையை போட்ட நிலச்சுவாந்தார் மீது நடவடிக்கை எடுத்து நிலங்களை மீட்டுதரக்கோரி மக்கள் போராட்டம் நடத்தினர், மேலும் தாங்களே சாலை அமைக்க பணிகளை துவங்கி மக்களால் பரபரப்பு ஏற்பட்டது,
இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை அடுத்த கொண்ட குப்பம் சிலோன் காலனி பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வந்த தமிழர்கள் முன்னுருக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அந்த காலத்தில் குடி இருக்க தனியாக இடமும் விவசாயம் செய்ய தலா ஒரு குடும்பத்திற்கு மூன்று ஏக்கர் விதம் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வறுமை மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக அப்பகுதி மக்கள் தங்களது நிலத்தை அப்பகுதியில் உள்ள தனபால் என்பவரிடம் விற்பனை செய்துள்ளனர்.
சும்மா வாசியுங்களேன்:-கிரைம் கள்ள போதை வஸ்த்து விற்றவர்கள் மீது குண்டர் சட்டம்!
விற்பனை செய்யும் போது ஊரிலிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் ஊருக்காக அமைக்கப்பட்டிருக்கும் இரண்டு ஆழ்துளை கிணறுக்கு செல்ல வழி விட்டுவிட்டு நிலத்தை எடுத்துக் கொள்ளுமாறு விற்பனையின் போது வாய் வழி பேச்சு வார்த்தை பேசிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 30 ஆண்டு காலமாக அந்தப் பகுதியில் குடிநீர் சேவையை பூர்த்தி செய்து வந்த அந்த இரண்டு ஆழ்துளை கிணறு தற்போது பழுதடைந்துள்ளது.
அதனை சரி செய்ய ஊர் மக்கள் முற்பட்ட போது தனபால் வழி விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதன் காரணமாக ஏமாற்றமடைந்த அப்பகுதி மக்கள் கிராம சபா கூட்டத்தில் குடிநீர் குழாய்க்கு செல்லும் வழியை மீட்டெடுக்க தீர்மானம் நிறைவேற்றினர் மேலும் இது சம்பந்தமாக தனபால் இடம் பேசிய போது அவர் எந்த ஒரு பிடியும் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் ஒன்றிணைந்து ஜேசிபி உதவியோடு தாங்களே நிலத்தில் இறங்கி சாலையை அமைத்துக் கொள்ளும் பணியில் ஈடுபட்டு வந்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அறிந்த தனபால் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் தகவல் அறிந்து விரைந்து வந்த சிப்காட் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு கொடுத்த நிலங்களை ஆட்டையை போட்ட தனபாலிடமிருந்து மீண்டும் எங்களுக்கே அவற்றை மீட்டுத்தர வேண்டும் என்று போராட்டக்காரர்கள் விசாரணையின் போது சொன்னார்கள், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.