கள்ள போதை வஸ்த்து விற்றவர்கள் மீது குண்டர் சட்டம்!

க.பாலகுரு
திருவாரூர் மாவட்டத்தில் தொடர் சாராய விற்பனை மற்றும் குட்கா கடத்தி வந்த இரு நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.
சும்மா வாசியுங்களேன்:-அரசு கொடுத்த நிலங்களை ஆட்டையை போட்ட நிலச்சுவாந்தார்! மீட்டுதரக்கோரி மக்கள் போராட்டம்!
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுக்கா, அம்மளுர் பகுதியில் தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்ட திருவாரூர் மாவட்டம், அம்மளுர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் அருணகிரி மற்றும் வெளிமாநிலத்திலிருந்து 500 கிலோ எடையுள்ள குட்கா போதை பொருள் கடந்தி வந்த தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த முருகானந்தம், ஆகிய இருவர் மீதும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரைப்பேரில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் அடிப்படையில் இருவரும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.