சேரிகாரர்களுக்கு முடிவெட்டமாட்டோம்! அடாவடி செய்த சலூன்காரர்...துணை போன பெண்!
பாலாஜி,
சேரிகாரர்களுக்கு முடிவெட்டமாட்டோம் என்று ஒருவர் அடாவடியாக பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், தலைவாசல் ஒன்றியம், ஊனத்தூர் கிராமத்தில் உள்ள வாலிபர் தாடி மீசையை டிரிம் செய்வதற்காக அங்குள்ள நியூ ஸ்டைல் சலூன்கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த கடையிலுல்ள ஊழியர் உங்களுக்கெல்லாம் இங்கு முடிவெட்ட முடியாது என்று கூறி வெளியேற்றியிருக்கிறார்.
அதனை அந்த வாலிபர் வீடியோ எடுத்த போது அங்கு வந்த ஒரு பெண் பறையன்களுக்கெல்லாம் இங்கு முடிவெட்ட மாட்டாங்க. போ எங்கு வேண்டுமானாலும் சொல்லிக்கோ.
எங்களை ஒன்றும் செய்ய முடியாது என சவுண்டு விட்டார். மேலும் சேரிகாரர்கள் காலனிகாரர்களுக்கு முடி வெட்டமாட்டாங்க என்று சண்டைபிடித்தார்.
சலூகடை ஊழியரோ ஒருபடி மேலே போய் நீ என்ன சேலம் சி.எம்மா? போய் முதலமைச்சர்கிட்ட கூட சொல்லிக்கோ எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று பந்தா காட்டினார்.
மேலும் அங்கு சவுண்டு விட்டுக்கொண்டிருந்த பெண் செல்போன் மூலமாக சிலரை அழைத்தார். பின்னர் அங்கு வந்த சிலர் மேற்படி வாலிபரை மிரட்டும் தொணியில் பேசினர்.
ஊருக்கென்று சில வரை முறைகள் உள்ளது போடா போ? என்ன ஊ...வியா என்று ஆபாசமாக பேசினர்.
இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த அந்தவாலிபர் நாளைக்கு பெண் வீட்டார் என்னை பார்க்க வர்ராங்க என்பதால் தாடி மீசையை டிரிம் செய்யவே வந்தே, இப்படி செய்யறீங்களே என்று அங்கு கூடியவர்களை பார்த்து கேட்டார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வட்டமடித்துக் கொண்டிருக்கும் நிலையில் மாவட்ட அளவிளான அலுவலர்களின் பார்வைக்கு சென்றதா அல்லது தெரிந்த பின்னர் நடவடிக்கை எடுத்தார்களா என்பது பற்றின தகவல் கிட்டவில்லை.