கூலிப்படையை கொண்டு அப்பாவிகள் தாக்கு:- போலிசை  கொச்சைப்படுத்தும் போக்கிரி!

கூலிப்படையை கொண்டு அப்பாவிகள் தாக்கு:- போலிசை  கொச்சைப்படுத்தும் போக்கிரி!

 நவீன்

 வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டான் காவல் நிலையத்துக்குட்பட்ட தட்டான்குட்டை கிராமத்தில் வசிக்கும் தனஞ்செயன் என்பவரையும் அவரது குடும்பத்தாரையும், அவர்களது உறவினரான ஜோதிபாசு தரப்பினர் ராடு மற்றும் ஆயுதங்களுடன் தாக்கி கொல்ல முயற்சித்தார்கள்.

இந்த தாக்குதல் சம்பவங்களை படம் எடுத்துக் கொண்டிருந்த போது த்அது தொடர்பான 4 செல்போன்களை ஜோதிபாசு தரப்பினர் பிடுங்கி சென்று விட்டனர்

சொத்து தகராறில் ஏற்பட்ட இந்த அடிதடியினால் பாதிக்கப்பட்ட தனஞ்செயன் தரப்பினர் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக சேக்கப்பட்டிருக்கிறார்கள்.

 பதிலுக்கு ஜோதி பாசு தரப்பினரும் தங்களை தாக்கிவிட்டதாக பொய் சொல்லி இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கிவிட்டு சென்றனர்.

 தனஞ்செயன் தரப்பினர் மீது கேஸ் இன் கவுண்டர் போடப்பட்டிருக்கிறது (அவர்களிடம் புகார் பெற்று வழக்கு).

 இந்நிலையில் நான் தான் போலிசுக்கு செலவு செய்து அவர்கள் மீதும் வழக்கு போடவைத்தேன். நான் பணம் கட்டிவிட்டதால் என்னை போலிஸ் பிடிக்காது என்று பொய் தகவலை பரப்பி ஜோதிபாசு ஊரில் மிரட்டிக் கொண்டு சுற்றுகிறாராம்.

 மேலும் தனஞ்செயன் கோஷ்டியை ஆஸ்பத்திரியிலிருந்து வெளியில் தள்ளட்டும் நாங்க அவர்களை போட்டுத்தள்ளுகிறோம் என்று மார்தட்கிறாராம்.

  இப்படி அவர் ஊரில் சொல்லிக்கொண்டு திரிந்துக் கொண்டிருக்க, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டும் உடல் நலன் பாதிக்கப்பட்டதால் தனஞ்செயன் அண்ட் கோவினர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

 இது குறித்து பள்ளிகொண்டா காவல் அதிகாரியிடம் பேசினோம்.

 இந்த பிரச்சனையில ஜோதிபாசு மீதுதான் தவறு. அந்த ஜோதிபாசு குடித்துவிட்டு போலிஸ் ஸ்டேஷன் வந்து சத்தம் போடுகிறார். தற்போது அவர் முன் ஜாமின் கோரியிருக்கிறார். அதன் மீதான விசாரணை புதன் கிழமையன்று வருகிறது.

  இந்த வழக்கில் போலீஸ் தன் கடமையை மிகச் சரியாக செய்திருக்கிறது, ஜாமீன் மனு விசாரணைக்கு  பின்னர் போலிஸ் தன் கடமையை. மேலும் சிறப்பாக செய்யும் என்றார்.