கேசுல கூட ஜாதிய பார்ப்பீங்களா! நியாயம் கோரும் பட்டியலின பெண்!விசாரணை நேர்மையாக நடக்கும் டி.எஸ்.பி!

ம.பா.கெஜராஜ்,
கேசுல கூட ஜாதிய பார்ப்பீங்களா என்று நியாயம் கோருகிறார் ஒரு பட்டியலின பெண்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை கோடியூர் பாதர் கெஸ்ரோட்டில் வசிப்பவர் தமிழ் செல்வி, அவர்தான் இப்படி புலம்புகிறார்.
இது பற்றி தமிழ் செல்வியிடம் பேசினோம்,
சார் நான் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவள் ஆவேன். எனக்கு சொந்தமான வீடு சக்கரகுப்பம் கிராம சர்வே எண் 68 /11ஆ2 ல் உள்ளது. அதில் என்னுடைய பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த நகைகள் இருந்தன நான் சிலகாலம் என் மகள் வீடான பாச்சல் துரைநகரில் நானும் என் கணவரும் தங்கியிருந்தோம். அதன் பின்பு எங்கள் வீடான ஜோலார்பேட்டை எஸ்.கோடியூரில் உள்ள எள் வீட்டிற்கு 11.10.2022 மாலை 3.00 மணிக்கு சென்று பார்த்தபோது என் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதனால் நான் அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் விசாரித்தில் எனது வீட்டிற்குள் சட்ட விரோதமாக ஆயுதங்களுடன் வந்து வீட்டின் பூட்டை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்தவர்கள் என் வீட்டின் அருகில் உள்ள ஜெயராமன் மனைவி லட்சுமி - 1 அவரது மகள்கள் தேவிப்பிரியா -2 ஜெயசுதா -3 வாணியம்பாடி தாலுக்கா அலசந்தாபுரத்தை சேர்ந்த விஸ்வநாதன் மகன் சிவக்குமார் -4 அவருடைய தம்பி முருகன் - 5 சிவக்குமாரின் மகன் அரவிந்தன் -6 புதுப்பேட்டை அக்ரகாரம் கிராமத்தை சேர்ந்த பாலன் மனைவி தமிழரசி -7 மற்றும் அவரது மகன் மற்றும் தண்ணீர்பந்தலை சேர்ந்த நாகராஜன் மனைவி மேனகா மற்றும் அவரது மகன் ஜனார்த்தனன் ஜோலார்பேட்டை வக்கணம்பட்டியை சேர்ந்த சௌந்தராஜன் ஆகியோர்கள் என் வீட்டினுள் நுழைந்துள்ளனர் என அறிந்தேன்.
அதன் பின்பு நானும் என் மருமகன் சிலம்பரசனும் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது என் வீட்டின் உள்ளே வாஷிங்மெஷின் பீரோ ஏர்கூலர், யுபிஎஸ் மற்றும் பொருட்கள் உடைக்கபட்டிருந்தது அதன் மதிப்பு ரூ. 20.000 /- ஆகும் பின்பு நானும் என் மருமகன் சிலம்பரசன் பீரோவை பார்த்தபோது பீரோவில் நான் வைத்திருந்த 35 சவரன் நகை திருடி சென்றுள்ளனர்.
மேலும் என் வீட்டில் வீடியோ கேமரா பொருத்தப்பட்டு ஹாட்டிஸ்க் -வைத்திருந்தேன். அந்த ஹாட்டிஸ்க்கையும்ம் எடுத்து சென்றுள்ளனர்.
இது குறித்து என் வீட்டின் அருகாமையில் குடியிருந்த ஜெயராமன் மனைவி லட்சுமி அவரது மகள்கள் தேவிபிரியா ஜெயசுதா மற்றும் அங்கிருந்த அலசந்தாபுரத்தை சேர்ந்த சிவக்குமார் ஆகியோரை கேட்டபோது நாங்கள் தான் உடைத்தோம், நகை மற்றும் பொருட்களை எடுத்து சென்றோம். இதை கேட்டால் புகார் கொடுத்தால் நாங்கள் எல்லாம் சேர்ந்து உன்னையும் உன் குடும்பத்தையும் ஒழித்து கட்டிவிடுவோம் என மிரட்டினார்கள்.
இது குறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.
எனது வீட்டின் பூட்டை உடைத்து அத்து மீறி சட்டவிரோதமாக ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்து ரூ.20.000/- மதிப்புள்ள பொருட்களை உடைத்து சேதப்படுத்தியும் பீரோவில் இருந்த நகைகள் 35 சவரன் திருடி சென்றும் வீடியோ கேமரா பதிவு செய்யும் ஹாட்டிஸ்க்-ஐ திருடி சென்றும் எனக்கும் என் குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ள மேற்படி நபர்கள்- ஜெயராமன் மனைவி லட்சுமி -1 அவரது மகள்கள் தேவிபிரியா-2 ஜெயசுதா. 3 வாணியம்பாடி தாலுக்கா அலசந்தாபுரம் சேர்ந்த விஸ்வநாதன் மகன் சிவக்குமார் -4 அவருடைய தம்பி முருகன் -5 சிவக்குமாரின் மகன் அரவிந்தன் -6 புதுப்பேட்டை அக்ராகரம் கிராமத்தை சேர்ந்த பாலன் மனைவி தமிழரசி -7 மற்றும் அவரது மகன் தண்ணீர்பந்தலை சேர்ந்த நாகராஜன் மனைவி மேனகா மற்றும் அவரது மகன் ஜனார்த்தனன் ஜோலார்பேட்டை வக்கணம்பட்டியை சேர்ந்த சௌந்தராஜன் ஆகியோர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேணுமாய் எனது புகாரில் கேட்டுக் கொண்டேன்.
எனது புகார் பேரில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தப்பட்டது. அப்படியிருக்க அங்குள்ள பெண் போலிஸ் அதிகாரி வழக்கை ரத்து செய்யப்போவதாக மிரட்டிவருகிறார். குற்றம் சாட்டப்பட்ட நபர்களும் அந்த அதிகாரி அம்மாவும் ஒரே பிரிவினராம், ஆகவே அவர்கள் மீது பதியப்பட்ட வழக்கை எம். எப். செய்யப்போவதாக சொல்கிறார். குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் எங்க வீட்டு ஹாட்டிஸ்க்கிலுள்ள விவரங்களை சொல்கிறார்கள், அதை விசாரணை அதிகாரியும் அறிவார்.
இது குறித்து நான் போலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிடப்பட்டிருக்கிறது. குற்றவாளிகளை உள்நோக்கத்தோடு காப்பாற்ற முயன்றால் சட்டபடி அதை சந்திப்போம் என்றார் தமிழ்செல்வி.
இது குறித்து திருப்பத்தூர் டி.எஸ்.பி. திரு.கணேஷ் அவர்களிடம் பேசினோம். கரண்ட் பேப்ரராக வந்ததை ஸ்டேஷனுக்கு பரிந்துரைத்து அனுப்பி அதன் மீது வழக்கு பதியப்பட்டு ஆரம்பகட்ட விசாரணை நடந்தது. இன்னும் இன்வெஸ்டிகேஷனில்தான் உள்ளது, விசாரணை முடியலை. இந்த இன்ஸ்வெஸ்டிகேஷன் நேர்மையாக நடக்க பார்த்துக் கொள்கிறேன் என்றார்.