தொழிற்சாலை நிர்வாகத்தின் மெத்தனம்!விபத்து ஆறு பேர் படுகாயம்!!

ஜி.கே.சேகரன்,
தனியார் சிமெண்ட் ஓடு தயாரிக்கும் தொழிற்சாலையில் ஸ்டிரிம் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.ஒப்பந்த அடிப்பபையில் பணிபுரியும் உத்திரபிரதேசத்தை சேர்ந்த 5பேர் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 6 பேர் படுகாயம்
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வின்டர்பேட்டை மேம்பாலத்திற்கு அருகே தனியார் சிமெண்ட் ஓடு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.
இந்த கம்பெனியில் தமிழகத்தை சேர்ந்த பணியாளர்கள் உட்பட வடமாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருவதாகத் தெரிகிறது.
இந்நிலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் அதிக வெப்ப அழுத்தத்தின் காரணமாக ஸ்ட்ரீம் லைன் பாய்லர் திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அங்கு பணியில் இருந்த தொழிலாளர்களான கள்ளக்குறிச்சியை சேர்ந்தவசந்த், உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த.முகமது ஜாவித்,சர்பர் அலி ,ராகுல்பி,பங்கஜ் குமார், மத்தியபிரதேசத்தை சேர்ந்த ராம் ஆகியோருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டது. மேலும் ஒரு சிலருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது.
இவர்களை உடனடியாக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.,
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு வந்த நிலையில் அங்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் நேரில் வந்து பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
பின்னர் அவர்களை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு அரக்கோணம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.