வீரமணிக்கு ஆறுதல் சொன்ன முன்னாள் அமைச்சர்கள்!
கு.அசோக்,
முன்னாள் பத்திரப்பதிவு மற்றும் வணிகத்துறை அமைச்சர் வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் அவரை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை, காந்தி ரோடு பகுதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் வீரமணி வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளால் சோதனை நடைபெற்றது.
அதை தொடர்ந்து இன்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் சிவி சண்முகம் ஆகியோர் வீரமணி சந்தித்து ஆறுதல் சொன்னார்களாம்.
அப்படியே சோதனை நடந்த போது அதிகாரிகளால் எழுப்பப்பட்ட கேள்விகள் குறித்து கேட்டறிந்தனராம்.