பா.ஜ.கட்சி நீங்கலாக அனைத்து மாநில முதலமைச்சர்களும் மாநில சுயாட்சிக்காக குரல் கொடுப்பவர்கள்:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

பா.ஜ.கட்சி நீங்கலாக அனைத்து மாநில முதலமைச்சர்களும் மாநில சுயாட்சிக்காக குரல் கொடுப்பவர்கள்:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

ம.பா.கெஜராஜ்,

பா.ஜ.கட்சி நீங்கலாக அனைத்து மாநில முதலமைச்சர்களும் மாநில சுயாட்சிக்காக குரல் கொடுப்பவர்களாக இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறார்கள் என்று திரு.மு.க.ஸ்டாலின் பேசினார்.

   தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (29.06.2022) திருப்பத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி ஆற்றிய உரையாற்றினார்.

 திருப்பத்தூர் மாவட்டத்தின் ஆட்சித்தலைவர் திரு. அமர்குஷ்வாஹா, இ.ஆ.ப., அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் முதல்வர் அவர்கள் பேசியதாவது:-

1600 ஆண்டுகள் பழமையானது.

நீண்ட நெடிய வரலாற்றினைக் கொண்டுள்ள நகரம், இந்த திருப்பத்தூர் நகரம். இந்த திருப்பத்தூரின் புகழை, பெருமைகளைப் பற்றி நம்முடைய திரு. துரைமுருகன் அவர்களும், திரு. வேலு அவர்களும் மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். சுமார் 1600 ஆண்டுகள் பழமையானது எனவும், சோழ, விஜயநகர, ஹொய்சாள மன்னர்கள் ஆண்ட பகுதி எனவும் இந்த வரலாறு கூறுகின்றது.

விஜயநகரப் பேரரசின் ஆட்சியின்போது, பதினான்காம் நூற்றாண்டில்

திரு-வன-புரம் என்ற பெயரில் இருந்த ஊர்தான், திருப்பத்தூர் எனப் பெயர் மாற்றம் அடைந்து இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறது. பத்து புனிதமான ஊர்கள் இருந்ததால் திரு-பத்து-ஊர் என அழைக்கப்பட்டு, பின்னர், அது திருப்பத்தூர் ஆனது எனவும் கூறப்படுகிறது. இத்தகைய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த புகழ்மிக்க மாவட்டத்து மக்களான உங்களை சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

எ.வ.வேலு முன்னிலையில் இருக்கிறார்"

ஜவ்வாது மற்றும் ஏலகிரி மலைத் தொடர்களால் சூழப்பட்ட, இயற்கை எழில் மிகுந்த மாவட்டம் இந்த மாவட்டம். பழங்குடி மக்கள் அதிகமாக வசிக்கும் மலைத்தொடர் இது. ஏலகிரி மலையில் உற்பத்தியாகும் காட்டாறு, மலை அடிவாரத்தில் கீழே இறங்கி, ஜலகம்பாறை அருவியாக உருவெடுக்கிறது.

அப்படிப்பட்ட இயற்கை சூழ்ந்த மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு, உங்களையெல்லலாம் சந்திக்கின்ற வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள்.

  திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அவர். எனவே, அந்த மாவட்டத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், திருப்பத்தூர் பொறுப்பைக் கொடுத்ததும், இங்கு வந்து தன்னுடைய சொந்த மாவட்டத்தைப் போல, பல்வேறு பணிகளை முடுக்கி விட்டிருக்கிறார் அமைச்சர் திரு. எ.வ.வேலு அவர்கள்.

 “நான் என்ன நினைப்பேன் என்பதை, நான் சொல்லாமலேயே, என் கண் ஜாடையைப் புரிந்து கொண்டு செயலாற்றுவதில் திரு. எ.வ.வேலு முன்னிலையில் இருக்கிறார்" என்று தலைவர் கலைஞரால் பாராட்டப்பட்டவர் அவர்.

   தலைவர் கலைஞர் அவர்களுடைய மனதை நிறைவு செய்வது என்பது சாதாரண காரியம் அல்ல, அதில் எ.வ. வேலு அவர்களும் ஒருவர். அதனால்தான், 'எதிலும் வல்லவர் வேலு; அதனால்தான் அவர் எ.வ. வேலு' என்று நான் குறிப்பிட்டேன். 'எ' -எதிலும், 'வ' - வல்லவர். அத்தகைய எதிலும் வல்லவர் உங்கள் மாவட்டத்திற்கு கிடைத்திருக்கிறார். அதனால்,  திருப்பத்தூர் - 'திரு-புத்தூர்' என்று சொல்லும் அளவுக்குப் புதிதாக இப்போது மாறிக் கொண்டு வந்திருக்கிறது.

   அவருக்கு தோளோடு தோள் நின்று பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய மாவட்டச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், செயல்வீரர் திரு. தேவராஜி அவர்களுக்கும், அதேபோல, தம்பி திரு.அண்ணாதுரை அவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.நல்லதம்பி அவர்களுக்கும், திரு.வில்வநாதன் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் முதலில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

 காய்ச்சல்

 கடந்த 25-ஆம் நாளன்று இந்த விழா நடந்திருக்க வேண்டும். ஆனால் கடந்த வாரம், லேசான காய்ச்சல் எனக்கு ஏற்பட்டு, அது முழுமையாக குணமாகாத காரணத்தால், மருத்துவர்கள் “ஒருசில நாட்கள் ஓய்வெடுப்பது நல்லது” என்று எனக்கு உத்தரவிட்டதால், அந்த குறிப்பிட்ட தேதியில் என்னால் வர முடியவில்லை.

 ஆனால், இன்றைய நாள் புதிய உற்சாகத்தோடு உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். மருந்து, மாத்திரைகளைவிட மக்கள் முகங்களைப் பார்க்கும்போதுதான், எனக்கு உற்சாகமும் மலர்ச்சியும் ஏற்படுகிறது. உங்களது முகங்களைப் பார்த்ததும், உடல்சோர்வு நீங்கி, உற்சாகம் பிறக்கிறது. மக்களைச் சந்திக்கின்றபோது ஏற்படக்கூடிய உற்சாகத்திற்கு ஈடு, இணை எதுவும் கிடையாது.

அண்ணன் திரு.துரைமுருகன் சொன்னார், வருகிற வழியெல்லாம் மக்கள் கூட்டம் எப்படி வரவேற்றது என்பதைப் பற்றி திரு. வேலுவும் எடுத்துச் சொன்னார், திரு.காந்தி அவர்களும் குறிப்பிட்டுக் காட்டினார். உண்மை தான்.

  எழுச்சியை மட்டுமல்ல, உணர்ச்சியை மட்டுமல்ல, வாழ்க என்ற அந்த முழக்கத்தை மட்டுமல்ல, சில தாய்மார்கள், சில இளைஞர்கள் என்னை நிறுத்தி, என் கையைப் பிடித்துக்கொண்டு கேட்டார்கள், “உடம்பு எப்படி இருக்கிறது, முதலில் அதைச் சொல்” என்று சொன்னார்கள். அதுதான் என்னுடைய மெய் சிலிர்த்துக் கொண்டிருக்கிறது.

 ஆட்சியர் அலுவலக வளாகம் 109 கோடி ரூபாய்,

  திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் 109 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, இந்த மேடைக்கு நாங்கள் வருவதற்கு முன்பு திறந்துவிட்டுத்தான் இங்கு வந்திருக்கிறோம். அந்த கட்டடத்தின் பெருமையைப் பற்றி நம்முடைய அமைச்சர்கள் சொன்னார்கள். மிக கம்பீரமாக இருக்கிறது.   

 இன்றைக்கு இந்தியா முழுக்க மாநில சுயாட்சிக் குரல் ஒலிக்கிறது. பா.ஜ.கட்சி நீங்கலாக அனைத்து மாநில முதலமைச்சர்களும் மாநில சுயாட்சிக்காக குரல் கொடுப்பவர்களாக இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறார்கள்.

  இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு,

27 விழுக்காடு இடஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது என்று சொன்னால், அதற்குக் காரணம் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

இரண்டு நாட்களுக்கு முன்பு பிறந்த நாள் கொண்டாடினோமே, ‘சமூகநீதிக் காவலர்’ வி.பி.சிங் அவர்கள், இந்தியாவின் பிரதமராக இருந்தபோது, மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வைத்து, அவர்கள் மூலமாக இந்தியா முழுமைக்குமான பிற்படுத்தப்பட்ட மக்களுடைய வாழ்வில் ஒளியேற்றினோம். இப்போதும் 27 விழுக்காட்டு இடஒதுக்கீட்டு உரிமையை, நமது சட்டப் போராட்டங்களின் மூலமாக உறுதி செய்து தந்திருக்கிறோம். இப்படி என்னால் அடுக்கிக் கொண்டே போக முடியும்.

  அந்த வகையில் அரசியல் நெறிமுறைகளை மட்டுமல்ல, ஆட்சியியல் நெறிமுறைகளையும் இந்தியாவுக்கு வழங்கும் வழிகாட்டியாக திராவிட முன்னேற்றக் கழக அரசு இருக்கிறது.

 உங்களின் வாழ்வு உயர, தமிழ்நாடும் உயரும். அத்தகைய பொற்காலத்தை உருவாக்குவதற்காகதான் எனது உடல்சோர்வைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல், நான் உழைத்துக்கொண்டு இருக்கிறேன். இன்னும் சொல்லட்டுமா, எனது சக்தியை மீறி உழைத்துக்கொண்டு இருக்கிறேன். நான் மட்டுமல்ல, அனைத்து அமைச்சர்களும் அப்படித்தான் செயல்பட்டு வருகிறார்கள்.

   முதலமைச்சர் பொறுப்பில் இருக்கின்ற நானும், அரசின் இளநிலைப் பொறுப்பில் இருக்கிற ஓர் அலுவலரும் ஒரே மாதிரியான நோக்கத்துடன் செயல்பட்டால், இந்த அரசுதான் சிறப்பான அரசாக விளங்கிடும். அத்தகைய அரசாக இன்றைய தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் பேசினார்.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9