பிரதமர் மோதி, ஐ.நா.வில் காலி இருக்கைகளைப் பார்த்து பேசினார்? விமர்சிக்கும் ப.சிதம்பரம்!உண்மை என்ன? விரிவான செய்தி!!

பிரதமர் மோதி, ஐ.நா.வில் காலி இருக்கைகளைப் பார்த்து பேசினார்? விமர்சிக்கும் ப.சிதம்பரம்!உண்மை என்ன? விரிவான செய்தி!!

ம.பா.கெஜராஜ்,

ப.சிதம்பரம், அதாங்க..இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர். அவர் பிரதம மந்திரியை உலக அரங்கில் விமர்சித்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். அதாவது "ஐ.நா பொதுச்சபையில் பிரதமர் நரேந்திர மோதி பேசியபோது, வெகு குறைவான இருக்கைகளிலேயே ஆட்கள் இருந்ததை பார்த்து ஏமாற்றம் அடைந்தேன்.

 

அவரது உரைக்கு ஒருவர் கூட கைதட்டாதது மேலும் ஏமாற்றம் தந்தது. இந்த விஷயத்தில்      ஐ.நாவுக்கான இந்திய நிரந்தரப்பிரதிநிதி அலுவலகம் மிகப்பெரிய அளவில் சொதப்பி விட்டது," என்று அவரது டுவிட்டர் பேஜில் கூறியிருந்தார்.

 ப.சி.யின் இந்த அரைவேக்காடு டுவிட்டுக்கு சுமார் நான்காயிரம் பேர் மறுடுவிட்டும், 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் 'லைக்' கும் செய்திருந்தனர்.

 மேற்கண்ட டுவிட்டரை ஏன் அரைவேக்காடு என்று குறிப்பிடுகிறோம் என்பதற்கான விவரங்களை "லைவ்லுக்" வாசகர்களுக்கு தொகுத்து அளிக்கிறோம்.

 ஐ.நா.சபையின் 76 வது அமர்வில் பாரத பிரதமர் நரேந்திர மோதி அவர்கள்  உரையாற்றினார். இந்த அமர்வு 25 ஆம் தேதியன்று நடந்தது.

  அப்போது ஐ.நா அரங்கில் மோதி உரையாற்றும் போது, பார்வையாளர்கள் இருக்கைகள் காலியாக இருந்தது என்பதே ப.சிதம்பரத்தினுடைய கருத்து.

  சிதம்பரத்தின் கருத்து உண்மைதானா? அதே போல் பிற நாட்டு தலைவர்கள் பேசியபோது, ஐ.நா அரங்கு இருக்கைகளில் எத்தனை பேர் இருந்தனர் என்பதைப் போன்ற தகவல்களை சேகரித்தோம்.

அப்போது சில அடிப்படையான விதிமுறைகள் பற்றின விவரங்கள் தெரியவந்தது.   

 அதில், ஐ.நா பொதுச்சபை அரங்கில் பேசும் தலைவர்கள், அவரவர் உரையின் சாராம்சங்களை செப்டம்பர் 10ஆம் தேதியே அனுப்பி வைக்க வேண்டும்.

  அந்த வகையில், பிரதமர் மோதியின் உரை அனுப்பிவைக்கப்பட்ட பின்பு செப்டம்பர் 25ஆம் தேதி  பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது.

  தற்போது கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால், வழக்கமான நடைமுறைகளைப் போல இல்லாமல் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் அதற்கான வழிகாட்டுதல் நெறிகளின்படியே ஐ.நா அமர்வில் தலைவர்கள் பேசவும், இருக்கைளில் இடம்பெறுபவர்களின் எண்ணிக்கை குறித்தும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பேசியபோது அரங்கில்  கூட்டம்.

பொது விவாதத்தில் நேரில் பங்கேற்கும் தலைவர்கள் மற்றும் காணொளி காட்சி வாயிலாக பதிவு செய்யப்பட்ட உரையை பகிர்ந்த தலைவர்கள், தங்களுடைய உரையின் கால அளவை 15 நிமிடங்களுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ளுமாறு ஐ.நா பொதுச்சபை செயலகம் கடிதம் மற்றும் ஐ.நா பொதுச்சபை அலுவலக இணையதளத்திலும் அறிவித்தது.

 செப்டம்பர் 25ஆம் தேதி,ஐ.நா பொதுச்சபையின் 14ஆம் சுற்று கூட்டத்தில் முதல் நபராக இந்திய பிரதமர் நரேந்திர மோதி இந்திய நேரப்படி மாலை 6.30 மணியளவில் பேச அழைக்கப்பட்டார். அவர் 22 நிமிடங்கள் உரையாற்றினார்.

  அவரைத் தொடர்ந்து 15 நாடுகளின் தலைவர்கள் தங்களுடைய முன்பதிவு செய்யப்பட்ட காணொளியை பகிர்ந்திருந்தனர்.

  இந்த தலைவர்கள் பேசி முடித்த பிறகு செப்டம்பர் 25ஆம் தேதி கடைசி நாடாக ரஷ்ய அதிபர் சார்பில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் சர்கே லாவ்ரோஃப் பேசினார்.

  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் தமது உரையை காணொளியில் பதிவு செய்து பகிர்ந்திருந்தார். அவர் செப்டம்பர் 24ஆம் தேதி உரையாற்றினார்.

  இதில் பல இருக்கைகள் காலியாகவே இருந்தன.

  செப்டம்பர் 21ஆம் தேதி ஐ.நா அமர்வின் துவக்க நாளில் பிரேசில் அதிபர் ஸேர் போல்சனாரோ, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேரில் உரையாற்றினார்.

  மேற்படி நாட்டு தலைவர்கள் பேசும்போது அரங்கத்தில் உரையாற்றும் தலைவர் முன்னிலையில் இருந்த வரிசைகள் மட்டுமே துவக்க நாளில் அதாவது அமெரிக்க அதிபர் பைடன் பேசியபோது நிரம்பியிருந்தன.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  அவையில் பேசியபோது இருந்த கூட்டம்

அங்கு ஒருவர் விட்டு மற்றொருவர் என சமூக இடைவெளியும் கடைப்பிடிக்கப்பட்டிருந்தது.

பைடனுக்கு இடதுபுறமாகவும் வலது புறமாகவும் பல இருக்கைகள் காலியாக இருந்தன.

 ஆனால் மோதி உள்ளிட்ட பிற தலைவர்கள் பேசும் போது, பல இருக்கைகள் காலியாக இருந்தன.

 கொரோனா பெருந்தொற்று காரணமாக, அரங்கில் கூட்டத்தின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டே இருக்க வேண்டும் என்ற கண்டிப்பான நடைமுறையை ஐ.நா பொதுச்செயலாளர் செயலகம் கடைப்பிடித்ததால் இது செயல்படுத்தப்பட்டது.

 அன்றைய தினம் எந்தெந்த நாடுகள் பேச அழைக்ப்பட்டிருந்தனவோ அவற்றின் பிரதிநிதிகளும், கூட்டம் நடத்த தேவையான குவோரம் எனப்படும் ஒரு பங்கு பிரதிநிதித்துவம் அவையில் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் நாடுகளின் பிரதிநிதிகள் ஐ.நா அமர்வுகளில் பங்கெடுக்க வைக்கப்பட்டனர்.

 "அந்த வகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஐ.நா அரங்கில் பேசும்போது முன் பகுதியில் எவ்வளவு கூட்டம் இருந்ததோ அதே போன்ற கூட்டமே பிற நாடுகளின் தலைவர்கள் பேசும்போதும் இருந்தது.

  ஐ.நா நிகழ்ச்சி மற்றும் தலைவர்களின் உரை, நேரலையாக ஒளிபரப்பானது. அதை உலகமே பார்க்க வேண்டும் என்பதாலேயே இந்த நேரலை ஏற்பாடு செய்யப்பட்டது.

ஐ.நா பொதுச்சபை துவக்க நாளில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உரை

 இதனால் அரங்கில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பதை விட தலைவர்களின் உரை உலகத்தை அடைந்ததா என்பதே முக்கியம்," என்று பார்க்கப்படுகிறது

 ஆனாலும், ஐ.நா. அமர்வின் துவக்க நாளில் பிரேசில் அதிபர் மற்றும் அமெரிக்க அதிபர் பேசும்போது அவையில் அடுத்தடுத்த இருக்கைகளில் பல நாடுகளின் பிரதிநிதிகள் அமர்ந்திருந்ததை ஐ.நா. வெளியிட்ட தொலைக்காட்சியில் காண முடிந்தது.

 இரண்டாம் உலக போர் முடிவில் ஐ.நா சபை நிறுவப்பட்டபோது, அதன் முதலாவது கூட்டத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு முதலாவதாக பேச எந்த நாடும் ஆர்வம் காட்டவில்லை. பிரேசில் மட்டுமே முதல் நாடாக ஐ.நா கூட்டத்தில் பேசியது. பிரேசிலைத் தொடர்ந்து அமெரிக்கா பேச அனுமதிக்கப்படுவதற்கு ஐ.நா தலைமையகம் அமைந்துள்ள நியூயார்க் நகரம் அமெரிக்காவில் இருப்பது என்பதே காரணம்.

 இந்த இரு நாடுகளின் தலைவர்கள் பேசி முடித்ததும், அடுத்து பேசும் நாடுகள், ஆங்கில எழுத்தில் அகர வரிசைப்படி அல்லாமல் நாட்டின் தலைவர்களின் வசதி, தேசத்தின் பிரதிநிதித்துவம், அளவு அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் 2013ஆம் ஆண்டு அமர்வில் அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பேசியபோது முதல் இரண்டு இருக்கைகள் காலி.

அந்த வகையில் செப்டம்பர் 25ஆம் தேதி முதலாவது நபராக பேசுவதற்கு நரேந்திர மோதி அழைக்கப்பட்டது கொரோனா நடைமுறைகளை பின்பற்றியே அரங்கில் இருக்கைகள் காளியாக வைக்கப்பட்டது.

நன்றி:-இந்திய வெளியுறவு அதிகாரிகள்.