நேற்று நாற்று…? இன்று நடை? திருப்பத்தூர் கலெக்டரின் வீடியோக்கள்!

நேற்று நாற்று…? இன்று நடை? திருப்பத்தூர் கலெக்டரின் வீடியோக்கள்!

கு.அசோக்,

 நெக்கனாமலை கிராமத்திற்கு 14 கிலோமீட்டர் மலைப்பாதைதில் நடந்தே சென்று நீர்நிலைகள் பள்ளிகளை ஆய்வு செய்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் திருப்பத்தூர்மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா.

 திருப்பத்தூர் மாவட்டம் ,வாணியம்பாடி வட்டத்திற்குட்பட்ட  நெக்கனாமலை கிராமம் உள்ளது.

   இந்த கிராமம் பல ஆண்டுகளாக சாலை வசதி உள்ளிட்ட வசதிகள் இல்லா கிராமமாகும் இந்தநிலையில், இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அதிகாரிகளுடன் மலைகிராமத்திற்கு சுமார் 14 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்தார்.

   மலையின் மீது வந்து அங்குள்ள ஏரி மற்றும் நீர் நிலைகள் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் அரசு பள்ளி ஆகியவைகளை ஆய்வு செய்தார். பின்னர் மக்களிடம் குறைகளையும் ஆட்சியர் கேட்டறிந்தார்.

  நேற்று அவரது மனைவி ஷிவாலிகாயுடன் சேற்றில் இறங்கி நாற்று நட்ட ஆட்சியர், இன்று மலையேறி காட்சி தந்தார்.

  நாளைக்கு எந்த வீடியோவோ?