தொழிற்சாலை கழிவுநீர் ஆறுகளில் கலந்தால் உரிமம் ரத்து! ஆட்சியரின் அதிரடி!

ஆர்.ரமேஷ்,
தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் ஆறுகளில் கலப்பது என தெரியவந்தால் அந்த தொழிற்சாலையின் உரிமம் ரத்து செய்யப்படும்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறையின் சார்பில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., தெரிவித்ததாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் சுற்றுச் சூழல் காலநிலை மற்றும் துறையின் சார்பில் நமது மாவட்டத்தில் ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
மேலும் தினசரி வீட்டுக் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து அதற்கென்று அமைக்கப்பட்ட குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.
தினசரி வீட்டுக்கு கழிவுநீர் ஆறுகளில் கலப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள குப்பைகளை ஏருவாக்குவதற்கு கடிதம் ஒன்றை விரைந்து அனைத்து நகராட்சிகளில் இருந்து அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அனைத்து நகராட்சி ஆணையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை கண்காணிக்க வருவாய் கோட்ட அளவிலான குழு ஒன்றை அமைத்து கண்காணிக்க வேண்டும்.
அவ்வாறு தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் ஆறுகளில் கலப்பது என தெரியவந்தால் அந்த தொழிற்சாலையின் உரிமம் ரத்து செய்யப்படும் மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததார்.
இக்கூட்டத்தில் மாவட்ட சுறறுச்சூழல் அலுவலர் திரு.பிரகாஷ், நகராட்சி ஆணையாளர்கள் திருமதி.ஷகிலா, திரு.ஜெயராமராஜா, திரு.ஸ்டான்லிபாபு, திரு.பழனி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த சுற்றிக்கை வெளியானால் ஆம்பூர் வாணியம்பாடியில் இராசாயன கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.