பத்து கோடி ரூபாய் மோசடி! விவசாயிகள் வயிற்றில் அடித்த அதிகாரிகள்! ஊக்கத் தொகை அபேஸ்:-சிபிசிஐடி நடத்திய கைது!

ம.பா.கெஜராஜ்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வேலூர்,இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் முறைகேடு நடந்தது தொடர்பாக குற்றப்பிரிவு குற்ற புலனாய்வுத்துறையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நிலமே இல்லாமல் நெல் விளைந்த அபூர்வத்தை சிபிசிஐடியினர் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின்கீழ் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களான வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நெல்கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்தது தொடர்பாக குற்றப்பிரிவு குற்ற புலனாய்வுத்துறை வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட 04.04.2022 அன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திரு.க.கௌதமன், குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர், சிறப்பு புலனாய்வுப்பிரிவு . குற்றப்புலனாய்வுத்துறை அவர்கள் தலைமையில் ஆய்வாளர்கள் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகியோர்கள் புலன்விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை வேலூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வேலூர் சிபிசிஐடி cr no.1 / 2022. R.gp.166 , 167 , 420 , 120b IPC வழக்கு தொடர்பாக இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட தனிநபர்கள் எவ்வித நிலம் மற்றும் ஆவணங்கள் இன்றி ரூ.8 கோடி அளவிற்கு நெல்கொள்முதல் செய்துள்ளனர்.
இவ்வாறு, அதிகாரிகளின் உதவியுடன் நெல் விற்பனை செய்து விவசாயிகளுக்கு கிடைக்கவேண்டிய அரசின் ஊக்கத்தொகையை தனிநபர்களும் அரசு அதிகாரிகளும் பகிர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டதில் எதிரிகள் இராணிப்பேட்டை மாவட்டம் தண்டலத்தை சேர்ந்த 1.என்.சிவகுமார், சிவா டிரேடர்ஸ் உரிமையாளர், 2.தக்கோலத்தை சேர்ந்த சீனிவாசன் 3.ரஞ்சித் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும் திருவண்ணாமலை குற்றப்பிரிவு மாவட்டத்தில் குற்றப்புலனாய்வுத்துறை பதிவு செய்யப்பட்ட திருவண்ணாமலை சிபிசிஐடி குற்ற எண் .1 / 2022 r.gp.166 , 167 , 420 , 120b IPCவழக்கு தொடர்பாக இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட தனிநபர் எவ்வித நிலம் மற்றும் ஆவணங்கள் இன்றி ரூ .57.82 இலட்சம் அளவிற்கு நெல்கொள்முதல் அதிகாரிகளின் உதவியுடன் நெல் செய்து விவசாயிகளுக்கு கிடைக்கவேண்டிய ஊக்கத்தொகையை தனிநபர்களும் அரசு அதிகாரிகளும் முறைகேட்டில் ஈடுபட்டதில் திருவண்ணாமலை விற்பனை அரசின் பகிர்ந்து மாவட்டம் ஏ.கே. படவேட்டை சேர்ந்த எதிரி சக்திவேல் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.