மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்!
உதயா,
அரசு பள்ளிக்கூடம் ஒன்றில் மாணவிக்கு மாணவன் தாலிகட்டி அதை வீடியோவாக வெளியிட்டுள்ளான்.
முன்பெல்லாம் அரசு பள்ளிகளில் படித்த காலத்தில் மரத்தடியிலும், கோவில் மண்டபத்திலும் உட்கார்ந்து பாடம் படித்து, ஆசிரியர்களிடம் எவ்வளவு அடி வாங்கியிருந்தாலும் ஆசியர்கள் மேலும் நாம் படித்த பள்ளியின் மேலும் எவ்வளவு மரியாதை வைத்திருந்தோம்.
ஆனால் இன்றைய அரசு பள்ளிகளுக்கு அரசாங்கம் எவ்வளவோ வசதிகள் செய்து கொடுத்தும் இப்போதைய மாணவர்கள் செய்யும் பொறுக்கித்தனங்களையும், ரவுடித்தனங்களையும், அவர்கள் ஆசிரியர்களை அவமானப்படுத்துவதையும் பார்க்கும் போது தான் எதற்க்கு பெற்றவர்கள் தங்கள் தகுதிக்கும் மீறி கடன் வாங்கியாவது தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள் என்று தெரிகிறது.
இப்படிப்பட்ட கேவலமான சூழலில் நல்ல குழந்தைகள் கூட இந்த கேவலமான, ரவுடி, புள்ளிங்கோக்களால் கெட்டுப்போய் விடுவார்கள். இதற்கெல்லாம் காரணம் வளர்ப்பு
இன்றைய அரசு பள்ளி ஆசிரியர்கள் நிலைமையை பார்க்கும் போது நமக்கே பரிதாபமாகத்தான் இருக்கிறது.