தொடர்ச்சியாக வெளியாகும் பெண் இன்ஸ்பெக்டர்களின் செய்தி!

தொடர்ச்சியாக வெளியாகும் பெண் இன்ஸ்பெக்டர்களின் செய்தி!

ச.செல்வராஜ்,

  பெண் இன்ஸ்பெக்டர்களைக் குறித்த செய்தி தொடர்ச்சியாக செய்திகளில் இடம்பிடித்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக உள்ள சாந்தகுமாரி செய்தியாகியுள்ளார்.

  இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் மதுரை மாவட்டத்தில் இருந்து மாறுதலாகி ஆலங்குளத்திற்கு வந்தார். இவருக்கு ஏற்கனவே ஏற்பட்ட விபத்தால் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில்  சாந்தகுமாரி இரவுப் பணியிலிருந்த போது விஷம் குடித்துள்ளார்.

  இதனால்  சாந்தகுமாரி போலீஸ் நிலையத்தில் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக போலீசார், அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

  இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சாந்தகுமாரி மன அழுத்தம் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  இவர் இதற்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றியபோது, கொசு மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

  கவுன்சிலிங் கொடுங்க ஆபிசர்.