என்னம்மா இப்படி பண்றங்கிலேமா? பெண் இன்ஸ்பெக்டர்களின் தில்லாலங்கடி!

என்னம்மா இப்படி பண்றங்கிலேமா? பெண் இன்ஸ்பெக்டர்களின் தில்லாலங்கடி!

ம.பா.கெஜராஜ்,

  சென்னை, பள்ளிக்கரணையில் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த ராணி என்பவரை தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் இ.கா.ப.அவர்கள் சஸ்பெண்டு செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறார். அதே நேரத்தில் சென்னை நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரான ரோகிணி என்பவர் 2 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக எழுந்த புகாரில் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

இது பற்றின விவரம் வருமாறு,

 சென்னை, தாம்பரம் பள்ளிக்கரணை போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்தவர் ராணி. இவர் பலரை மிரட்டி லஞ்சம் பெற்று வருகிறார் என்கிற புகாருக்கு சொந்தக்காரர் ஆவார்.

  இதற்காக சில வழக்கறிஞர்களுடன் டை அப் வைத்திருந்தார். இதனால் நேர்மையான வழக்கறிஞர்கள் பலருக்கு ப்ராக்டீஸ் பாதிப்பு ஏற்பட்டது.

 அது மட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்கள் பலர் சில வழக்கறிஞர்கள் முன் கண்ணை கசக்கிக் கொண்டு நின்றனர்.

 இந்நிலையில் இது பற்றின புகார் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் இ.கா.ப.அவர்கள் பார்வைக்கு சென்றது. ரகசியமாக விசாரித்த அவர், ராணி மீதான புகார் உண்மை என்பதை கண்டறிந்தார். அதன் பேரில் ராணி சஸ்பெண்டு செய்யப்பட்டிருக்கிறார்.

 அடுத்ததாக ரோகினி. இவர் நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த போது தியாகராஜ நகரில் உள்ள பிரபல ஜூவல்லரி கடையின் மேலாளர் சிவக்குமார் என்பவரை இரண்டு ஆட்களை அனுப்பி மிரட்டியிருக்கிறார். 2 லட்சம் ப் அணமும் கேட்டுள்ளார்.

  அப்படி மிரட்டிய இரு நபர்களும் போலிசாரே. இது குறித்து மேற்படி நகைக்கடை மேலாளர் சிவக்குமார் கடந்த  11 ஆம் தேதி சென்னை போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

  அதன் பேரில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விசாரித்த போது,லொன்னரை லட்சம் இன்ஸ்பெக்டர் ரோஹினிக்கும், மிரட்டலுக்கு பயன்பட்ட போலிசாருக்கு 50 ஆயிரமும் கணக்கு வைத்து மிரட்டி லஞ்சம் கேட்டது உறுதி ஆனது. இதனால் ரோஹினி காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு தற்போது சென்னை திருவல்லிகேணி கஸ்தூரிபாய் அரசு ஆஸ்பத்திரி காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்ட்டிருக்கிறார்.

   இது குறித்து ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் லேடி ஆபிசர்கள் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு ஒழுக்கமாக பணியாற்றுவார்கள் என்று நினைத்தால், இப்படியெல்லாம் செய்யறாங்க. இன்னும் நிறைய விஷயம் உள்ளது வெளியில் சொன்னால் நன்றாக இருக்காது என்று வருத்தப்பட்டார்.