திருப்பத்தூரில் மஞ்சள் பொடி தூவிய கார் - நடந்தது என்ன? பரபரப்பு!

திருப்பத்தூரில் மஞ்சள் பொடி தூவிய கார் - நடந்தது என்ன? பரபரப்பு!

 கு.பிரணேஷ்,

 கார் கண்ணாடி உடைக்கப்பட்டு, இருக்கைகள் கிழிந்த நிலையில் நிற்கவைக்கப்பட்டிருந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது, அந்த காரை ஓட்டி வந்தவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இது பற்றி விவரம் வருமாறு,

 திருப்பத்தூர் மாவட்டம், கொரட்டி பகுதியில் திருப்பத்தூர் சேலம் நெடுஞ்சாலையில் கேரள மாநில பதிவு எண்  கொண்ட  சிவப்பு நிற எட்டியோஸ் கார் ஒன்று நின்றுக் கொண்டிருந்தது.

 அந்த காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு, சீட்டுகள் சேதப்படுத்தப்பட்ட நிலையில் மஞ்சள் பொடி தூவப்பட்டிருந்தது, அதைப்   பார்த்த போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

 பின்னர்,  திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

  அப்போது அந்த காரை எடுக்க வந்த கேரளா பகுதியை சேர்ந்த ஓட்டுநர் ஷாகீரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  காரில் இரண்டு செருப்புகள் இருந்த நிலையில் காரில் இரத்த கறையை போக்க மஞ்சள் பொடியை தூவினார்களா?  கை குட்டை மூலம் முகத்தை மூடி கொண்டு சென்றனரா?. என விசாரிக்கிறார்களாம்.

   கார் கேரளா பதிவு எண் கொண்டதால் அங்கு நடந்த எ.டி.எம் கொள்ளையில் சம்மந்தம் இருக்குமா? அல்லது அந்த கார் பெங்களூரு ஏர் போர்ட்டில் இருந்து வந்ததால் தங்கம் கடத்தி வரபட்டு அதனை கொள்ளை அடிக்க கொள்ளையர்கள் திட்டமிட்டனரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.