கோவை கலைஞர் கல்லூரிக்குள் வடமாநில தொழிலாளர்கள் அட்டூஷியம்:- பதறி ஓடிய மாணவிகள்!

ஜெ.அருண் ஹென்டிரிக்ஸ்
சமீப ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களின் ஆதிக்கம் பல்வேறு துறைகளில் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு இல்லாமல் ஏற்பாடும் சூழ்நிலை நிலவி வருகிறது. கூடவே நம்மவர்களை வம்புக்கிழுத்து அடிதடியிலுய்ம் அவர்கள் இறங்குகிறார்கள்.
சமீபத்திய சம்பவங்களே அதற்கு சாட்சி.
இந்நிலையில் கோவை சூலூரில் உள்ள கலைஞர் கல்லூரியில் மாணவர்களுக்கும் , வடமாநில தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கல்லூரி வளாகத்திற்குள் உள்ளேயே மாணவ-மாணவிகள் தங்கும் விடுதிகள் உள்ளன. அந்த விடுதி கேண்டினில் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், நேற்று கல்லூரி வளாகத்தில் இருக்கக்கூடிய விடுதியில் மாணவ-மாணவிகள் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, உணவு பரிமாறுவதில் நேற்று மாணவர்களுக்கும் - வடமாநில தொழிலாளர்களுக்கும் இடையே நேற்று இரவு மோதல் ஏற்பட்டது. கூடுதல் உணவு வழங்கக்கோரி மாணவர்கள் கேட்ட நிலையில் அதற்கு வடமாநில தொழிலாளர்கள் மறுப்பு தெரிவித்ததால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது, வடமாநில தொழிலாளர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு பதிலடியாக மாணவர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலின் போது வடமாநில தொழிலாளர்கள் உருட்டுக்கட்டைகளுடன் கல்லூரி வளாகத்திற்குள் உள்ள கேண்டினுக்குள் நுழைந்துள்ளனர். இதை கண்ட மாணவிகள் அங்கிருந்து பதறி ஓடினர்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த போலீசார், கல்லூரிக்கு விரைந்து வந்து மாணவர்களையும் - வடமாநில தொழிலாளர்களையும் சமாதானப்படுத்தினர். இதன் பின்னர் வடமாநில தொழிலாளர்கள் சிலர் கல்லூரி வளாகத்திற்குள் உருட்டு கட்டைகளுடன் சுற்றித்திரியும் வீடியோவை கைபற்றி விசாரித்து வருகின்றனர்.