மண்டியம்மன் திருவிழாவில் மூவர் பலி!
கு.அசோக்,
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுக்கா, கீழவீதி கிராமத்தில் மண்டியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் இன்று நடந்த மயிலேறு நிகழ்ச்சியின் போது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இந்த சம்பவத்தில் முத்துகுமார் (39), பூபாலன் (40), ஜோதிபாபு (19) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் சுமார் 8-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் சிலருக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுதொடர்பாக நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடவுள் காப்பாற்றுவார் என்று நம்பி சென்ற பக்தர்கள் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.