திருட்டு ஸ்கூட்டரில் முதல்வர் காரை ஓவர் டேக் செய்த வாலிபர் கைது!

திருட்டு ஸ்கூட்டரில் முதல்வர் காரை ஓவர் டேக் செய்த வாலிபர் கைது!

ஜி.சாந்தகுமார்,

திருட்டு ஸ்கூட்டரில் முதல்வர் காரை ஓவர் டேக் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

 நேற்று முன்தினம் மதியம் முதல்வர் ஸ்டாலின்,னரசு பணிகளை பணிகளை முடித்துக்கொண்டு, அவரின் காரில் கிளம்பினார். முதல்வர் காரை தொடர்ந்து, கான்வாய் சென்றதும் அதனுடன், பாதுக்காவலர்களின் கார்களும் அணிவகுத்து சென்றன.

அப்போது, போர் நினைவிடம், நேப்பியர் பாலம் அருகே , முதல்வர் கான்வாயை முந்திக்கொண்டு ஆக்டிவா ஸ்கூட்டர் ஒன்று வந்தது. ஆக்டிவா ஓட்டி வந்த வாலிபரை, பாதுக்காவலர்கள் எச்சரித்து வந்தனர். ஆனாலும், அந்த வாலிபர், அதை பொருட்படுத்தாமல், கான்வாயை முந்த முயன்றார்.

  இத்தனைக்கும் அந்த வாகனத்தில், நம்பர் பிளேட் இல்லை. இதனால், பாதுக்காவலர்கள், நேப்பியர் பாலம் அருகே, பூத்தில் இருந்த போக்குவரத்து போலீசாரிடம் தெரிவித்தனர். அவர்கள் அந்த வாலிபரை பிடிக்க முயற்சித்தனர். ஆனால், அவர், வாலாஜா சாலைக்கு ஸ்கூட்டரை திரும்பினார். பின்னர் அவரை பைக்கில் விரட்டி சென்று, அந்த வாலிபரை மடக்கிப்பிடித்தனர்.

 அவரை கவனித்து விசாரித்த போது, அவர், தேனாம்பேட்டை, தாமஸ் சாலையை சேர்ந்த அஜித்குமார்(20) என தெரியவந்தது. அவர் ஓட்டி வந்த ஆக்டிவா திருடப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தி நகரில் உள்ள ஒரு வீட்டில் நிறுத்தியிருந்த வண்டியின் பூட்டை உடைத்து, நம்பர் பிளேட்டையும் பிடுங்கி எறிந்து, ஆக்டிவா ஓட்டி வந்தது தெரியவந்தது.