தீராத காதல்.... ஒருவர் பின் ஒருவர் சாவு...முற்றுகையால் பரபரப்பு!

கு.அசோக்,
காதல் தகராறில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் காவல் துறையினர் 5 பேரை கைது செய்தனர். மேலும் தப்பி சென்றுள்ள இருவரை கைது செய்ய கோரி சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
இராணிப்பேட்டை மாவட்டம், பானாவரம் அடுத்த மகேந்திரவாடி பகுதியை சேர்ந்தவர்கள் சக்திவேல் (32) ,அருள் (45) இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்த வெவ்வேறு குடும்பத்தினர்.
இதில் அருள் எனபவரின் மகள் வனிதா -வை சக்திவேல் காதலித்து வந்துள்ளார்,இந்த விஷயம் அருள் குடும்பத்திற்க்கு தெரியவந்தததை தொடர்ந்து வனிதாவை கன்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த வனிதா கடந்த ஓராண்டுக்கு முன் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததாக கூறப்டுகின்றது.
இந்நிலையில் வனிதா இறப்பிற்கு சக்திவேல் தான் காரணம் என நினைத்த அருள் குடும்பத்தினர் சக்திவேலுவிடம் தகர்றில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இரு குடும்பத்தினருக்கும் தொடர்ந்து தகராரு இருந்து வந்துள்ளது. இதனிடையே தனியார் பேருந்தின் ஓட்டுனரான அருள் கடந்த 24.04.2021 மகேந்திரவாடி அடுத்த வேடந்தாங்கல் பகுதி அருகே தனியார் பேருந்தை ஓட்டி வந்தபோது இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த சக்திவேல் மீது பேருந்தை மோதி விபத்து ஏற்படுத்தியதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு வலது கால் துண்டிக்கப்பட்டு செயற்கைகால் பொருத்தப்பட்டது, தொடர்ந்து பிழைப்புக்காக அவர் ஜேசிபி வாகனம் ஓட்டிவந்துள்ளார்.
இச்ம்பவம் அறிந்த உறவினர்கள் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் விழுந்து கிடந்த சக்திவேலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஆபத்தான நிலையில் உள்ள சக்திவேலுவை மேல்சிகிச்சைக்கா வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சக்திவேல் இறந்துள்ளார்.
இச்சம்வம் குறித்து சக்திவேலுவின் அக்காள் கனவர் செந்தில் குமார் கொடுத்த புகாரின் பேரில் நெமிலி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தலைமறைவாக உள்ள அருள் மற்றும் அவரது மகன் தினேஷ் இருவரையும் தேடி வந்த நிலையில்
இதில் சம்மந்த பட்ட அருள் (43),தினேஷ்(23), நந்தகுமார் (39), சதீஷ் (21),கலையரசன் (19) ஆகிய 5-பேரை 25மணிநேரத்தில் காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் தப்பியுள்ள இருவரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் உயிரிழந்த சக்திவேல் உடலை நெமிலி-மகேந்திரவாடி சாலையில் வைத்து உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.