குட்கா ரைடு போன டமால் டுமில் பார்டிகள்!

குட்கா ரைடு போன டமால் டுமில் பார்டிகள்!

ஜி.கே.சேகரன்,

 போலிஸ் மற்றும் நிருபர்கள் என்று கூறி குட்கா ரைடு செய்த இருவர் போலிச்ல் ஒப்படைக்கப்பட்டனர்.

குட்கா விற்கும் கடைகளை குறிவைத்து காவல்துறை எனக்கூறி வசூல் வேட்டை 2 செய்தியாளர்கள், போலி காவல்துறையினர் மீது வியாபாரிகள் நிஜ காவல் நிலையத்தில் புகார்.

  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சித்திகாபாத் பகுதியிலுள்ள சில்லரை கடை ஒன்றில் இன்று இரவு காவல்துறை சோதனை என கூறிக்கொண்டு இரண்டு நபர்கள் குட்கா பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா என சோதனை மேற்கொள்வது போல வியாபாரிகளை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர்.

 அடுத்தடுத்த கடைகளில் குறிப்பிடும்படியான இரண்டு நபர்கள் தொடர்ந்து இதுபோல செயல்களில் ஈடுபடவே அப்பகுதியில் உள்ளவர்கள் இருவரை மடக்கி பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  தகவல் அறிந்த காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில்,வியாபாரிகள் ஒன்று திரண்டு வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

 அப்போது, பணம் பறித்து சென்ற இருவர் காவல் நிலையத்தில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

  இதேபோன்று ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் காவல்துறையினர் என்று (போலி காவல் பிரிவினர்) சிலர் குட்கா விற்கும் கடை வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் நபர்கள் மீது வாணியம்பாடி நகர காவல் நலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.