சஸ்பெண்டு செய்யப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர்:- தற்கொலைக்கு முயற்சி!

சஸ்பெண்டு செய்யப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர்:- தற்கொலைக்கு முயற்சி!

  அ.ராகுல்,

 குற்றவாளிகள் மீது பாசம் காட்டிய பெண் இன்ஸ்பெக்டர் மீது பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதையறிந்த அந்த இன்ஸ்பெக்டர்  தற்கொலை செய்து கொள்ள முயன்ற நிலையில் அவரை அக்கம் பக்கத்தினர் காப்பாற்றியிருக்கிறார்கள்.

 கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் வசிப்பவர் கலையரசி.மாவட்ட குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டரா£க பணியாற்றி வந்தவர் கலையரசி.  இவர், பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றீய போது பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் , குற்றவாளிகளுக்கு சாதகமாக பணியாற்றி உள்ளதாக புகார்கள் கூறப்பட்டது.

 அதன் பேரில் கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி அவரை சஸ்பெண்ட் செய்துஉத்தரவிட்டார். இது தொடர்பான உத்தரவு நகல் கலையரசிக்கு வழங்கப்பட்டது.

  இதனால் இன்ஸ்பெக்டர் கலையரசி மன உளைச்சலில் காணப்பட்ட நிலையில் , நேற்று மாலை மண்ணெண்ணெய் எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

  இதையறிந்த அசரது  குடும்பத்தினர் உட்பட அக்கம்பக்கத்தினர் கலையரசியை காப்பாற்றினார்கள்.

 நல்லவேளையாக அவருக்கு காயம் ஏற்படவில்லை . இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இன்ஸ்பெக்டர் கலையரசி திருச்சியில் எஸ்ஐயாக பணியாற்றிய போதே அவர் மீது சிலபல புகார்கள் எழுந்து அடங்கியது குறிப்பிடத்தக்கது.