சென்னை சிந்தாரிபேட்டை சூதாட்ட கிளப்பால் பரிதாபம்!

சென்னை சிந்தாரிபேட்டை சூதாட்ட கிளப்பால் பரிதாபம்!

  ஜெ.ஸ்ரீதர், 

 பிள்ளைகளின் ஸ்கூல் பீஸை வைத்து கணவன் சூதாட்டம்!    பிளைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட வைத்திருந்த பணத்தை கணவன் சூதாட்டத்தில் பறிகொடுத்துவிட்டார். இத்யனால் விரக்தியடைந்த

மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

  சன்னையை அடுத்த நந்தம்பாக்கம் வடக்கு மாட வீதி 2-வது தெருவில் வசிப்பவர் சுரேஷ்பாபு போதை ஆசாமி ஆவார். இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து குடி, சூதாட்டம் என்று சுற்றித்திரிந்தார்.

   இவருடைய மனைவி பெயர் புவனேஸ்வரி,  இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

 அப்படியிருக்க புவனேஸ்வரி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து குடும்பத்தை கவனித்து வந்தார். புவனேஸ்வரியின் தந்தை ராஜேந்திரனும் மகளின் குடும்பத்துக்கு உதவி செய்து வந்துள்ளார்.

 இந்த சூழலிலும், புவனேஸ்வரி, பிள்ளைகளின் ஸ்கூல்  கட்டணத்துக்காக ரூ.20 ஆயிரம் சேர்த்து வைத்திருந்தார்.

  இதை கண்டுபிடித்த சூதாட்ட சுரேஷ்பாபு, குழந்தைகளின் பள்ளி கட்டணத்துக்கு வைத்து இருந்த பணத்தை மனைவிக்கு தெரியாமல் எடுத்து சென்று சிந்தாதிரிபேட்டையில் நண்பர்களுடன் சூதாடி இழந்துள்ளார்.

 இதையறிந்த புவனேஸ்வரி, சூதாட்டத்துக்கு அடிமையான கணவரால், குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுகிறதே என அழுதுள்ளார்.

    பிறகு அவர் வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறி கொக்கியில் சுடிதார் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.