45 புள்ளி மான்கள் உயிரிழப்பு! சென்னை ஐ.ஐ.டியில் என்னதான் நடக்கிறது!

45 புள்ளி மான்கள் உயிரிழப்பு! சென்னை ஐ.ஐ.டியில் என்னதான் நடக்கிறது!

  ஜி.எஸ்.மேத்யூராஜ்,

   ஒரே ஆண்டில் 45 புள்ளி மாண்கள் சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் இறந்து போயின. இந்நிலையில் கடந்த இரண்டே நாட்களில் நான்கு மான்கள் உயிரிழந்துள்ளன.

   சென்னை ஐஐடியில் மான்கள் உயிரிழப்பது பல ஆண்டுகளாகவே தொடர்கதையாக இருந்து வருகிறது. காட்டுயிர் ஆர்வலர் ஆண்டனி ரூபின் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்ற தகவல்கள் படி, 2021ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் 20-ஆம் தேதி வரை, சென்னை ஐஐடியில் 45 புள்ளி மான்கள் உயிரிழந்துள்ளன.

  அதோடில்லாமல் 5 வெளிமான்கள், 2 புனுகுப் பூனைகள், ஒரு குள்ளநரி, 14 குரங்குகள், ஒரு உடும்பு ஆகியவை உயிரிழந்துள்ளன.

  ஐ.ஐ.டி. வளாகத்தில் தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகளை மான்கள் சாப்பிடுவதாலும், அதே போல் அங்கு உலவும் உலவும் நாய்களால் தாக்கப்படுகின்றன என்றும், ஆந்த்ராக்ஸ் நோய்க்கு உள்ளாகியும் செத்திருக்கலாம் என்கிறார்கள்.