ரவுடிகளுடன் சேர்ந்து தாக்குதல்! சி.எம்.சியின் முன்னாள் அலுவலர் மீது உளவுத்துறை அறிக்கை!

ம.பா.கெஜராஜ்,
ரவுடிகளுடன் சேர்ந்து தாக்குதல் நடத்திய சி.எம்.சியின் முன்னாள் அலுவலர் மீது உளவுத்துறை அறிக்கை தயார் செய்து அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
வேலூர் மாவட்டம், வேலூர் நகரில் உள்ள சி.எம்.சி மருத்துவமனையில் அலுவலராக பணியாற்றிய நபர் ஒருவர் பாகாயம் சஞ்சீவிபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம் சித்து மாவட்டம் ஆகும்.
அப்படியிருக்க இவர் கடந்த 25 ஆம் தேதி வேலூர் ஆபிசர்ஸ் லைனிலுள்ள கண்ணா என்கிற ஓட்டலுக்கு சில ரவுடிகளுடன் நுழைந்து அங்கு டீசண்டாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர்களைப் பார்த்து ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதுடன், அங்கு அமர்ந்திருந்த சத்துவாச்சாரி பகுதி 5-யைச் சேர்ந்தவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கிறார்.
கிறிஸ்தவ பேராயம் ஒன்றின் தேர்தல் அருகில் உள்ள கல்லூரியில் நடக்கவிருந்த நேரத்தில் அவர் இந்தமாதிரியாக ரவுடிகளுடன் வலம் வந்து அடாவடி செயலில் ஈடுபட்டிருக்கிறார்.
இந்நிலையில் பேராய தேர்தல் முடிவடைந்த நிலையில், பொது இடத்தில் தாக்குதலில் ஈடுபட்ட நபர் வென்றுள்ளார்.
இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சூழலில், மேற்படி அடாவடி நபர் மற்றும் அவருடன் வந்திருந்த ரவுடிகள் பற்றின முழுவிவரங்களை உளவுத்துறை சேகரித்து மாநில உயர் காவல் அதிகாரிகளின் பார்வைக்கு வைத்துள்ளது. ஏற்கனவே போலிஸின் குறிப்பில் உள்ள ரவுடிகளும் இந்த தாக்குதலில் இடம் பெற்றிருந்தனர் என்கிற ஆதாரங்களையும் சமர்பித்திருக்கிறார்களாம்.
அதன் பேரில் தற்போது உள்ளூர் போலிசார் விசாரிப்பதாக தகவல். இதையறிந்த ரவுடிகும்பலின் தலைவன் சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி கேமிரா பதிவு சாட்சியத்தை கலைக்க முற்பட்டு வருகிறானாம்.
குறிப்பு:- பேராய தேர்தலில் வென்றுள்ள மேற்படி நபர், இதே ரவுடிகளை முன்னிறுத்தி பேராய நிர்வாகத்தை மிரட்டக்கூடும் என்று சி.எஸ்.ஐ கிறிஸ்தவர்கள் பலர் கவலைப்படுகின்றனர்.