ரவுடியிஸம்! இளைஞருக்கு அரிவாள் வெட்டு!

ஜி.கே.சேகரன்,
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அஜய்குமார் பெயிண்டர் பணிபுரியும் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளைஞர் சிலருக்கும் ஏற்கனவே கிரிக்கெட் விளையாடுவதில் முன்விரோதம் இருந்துள்ளது..
இந்நிலையில் சம்பவத்தன்று அஜய்குமார் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த சிலர் அஜய்குமாரை சரமாரியாக அரிவாளாள் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இதனை தொடர்ந்து இரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்த கிடந்த அஜய்குமாரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்,
பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு கல்லூரி அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்..
இதனை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குபதிசெய்தனர்.
கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இளைஞர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது