100 உருது பதிப்பாளர்கள் வாணியம்பாடியில் சங்கமம்!

100 உருது பதிப்பாளர்கள் வாணியம்பாடியில் சங்கமம்!

 கு.அசோக்,

  வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில்  ஜனவரி 11ம் தேதி வரை 25வது தேசிய உருது புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.

   திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, முஸ்லிம் கல்விச் சங்கம் மற்றும் உருது மொழி வளர்ச்சிக்கான தேசிய ஆணையம் ஆகியோர் இணைந்து இசுலாமியாக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஜனவரி 3ம் தேதி முதல் 11ம் தேதி வரை 25வது தேசிய உருது புத்தக கண்காட்சி நடைபெறுகிறது

   இந்நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 100 உருது பதிப்பாளர்கள் தங்களது புத்தகங்களை விற்பனைக்காக காட்சிப்படுத்த உள்ளனர்.

   ஒன்பது நாட்கள் நடக்க உள்ள இந்நிகழ்ச்சியில் பல்வேறு கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

  இந்த புத்தக கண்காட்சியில் பங்கு கொள்வதற்கு தினம் தினம் மக்கள் சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும் இருந்தும் அன்டை மாநிலங்களில் இருந்தும் வரவுள்ளனர்.

  இந்நிகழ்ச்சியை இசுலாமியாக் கல்லூரி மைதானத்தில் உருது மொழி வளர்சிக்கான தேசிய ஆணையத்தின் இயக்குநர் முனைவர் சேக்.அகீல் அஹ்மத் தொடங்கி வைத்தார்.