ஆட்சியர் நடத்திய "நான் முதல்வன்" திட்ட ஆலோசனை கூட்டம்!

ம.பா.கெஜராஜ்,
வேலூரில் நடைபெற்று வரும் மாபெரும் புத்தகத் திருவிழாவில் உலகெலாம் தமிழ் என்ற தலைப்பில் எழுத்தாளர் திரு. மனுஷ்ய புத்திரன் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ராமமூர்த்தி, மாவட்ட நூலக அலுவலர் திரு.பழனி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் கவிஞர் திரு.ரகசியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது புத்தக அரங்குகளை பார்வையிட சென்ற மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் புத்தக அரங்குகளை பார்வையிட வந்திருந்த மேல்மொணவூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணாக்கர்களுக்கு தன்னுடைய சொந்த செலவில் புத்தகங்களை வழங்கினார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளின் ஒரு பகுதியாக இன்று (02.03.2023) நடைபெறும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது பிரிவு கபடி போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்களும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.து.மு. கதிர் ஆனந்த் அவர்களும் தொடங்கி வைத்து வீராங்கனைகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் வேலூர் மாநகராட்சி துணை மேயர் திரு. சுனில் குமார், 1 வது மண்டல குழு தலைவர் திருமதி புஷ்பலதா வன்னிய ராஜா, மாமன்ற உறுப்பினர் திருமதி விமலா சீனிவாசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமதி.நோயலின் ஜான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காட்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிரம்மபுரம் ஊராட்சியில் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் கட்டப்பட்டு பழுதடைந்துள்ள குடியிருப்புகள் குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள கணக்கெடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மகளிர் திட்ட இயக்குநர் திரு.செந்தில்குமாரன், வட்டாட்சியர் திரு.ஜெகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலகர் திரு.ரகு, ஊராட்சி மன்ற தலைவர் திரு.ராதா கிருஷ்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
காட்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சேவூர் ஊராட்சியில் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் கட்டப்பட்டு பழுதடைந்துள்ள குடியிருப்புகள் குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள கணக்கெடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெருமுகை பகுதியில் சென்னை -பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணியின் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீர்செய்வது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது தேசிய நெடுஞ்சாலை திட்ட பொறியாளர் திரு.ஜெயகுமார், வேலூர் வட்டாச்சியர் திரு.செந்தில் மற்றும் பலர் உடனிருந்தனர்.
மேலும், உள்ள அரசு, தனியார் பொறியியல், கலை கல்லூரிகளில் செயல்படுத்தப்பட்ட நான் முதல்வன் திட்டத்தினை, இத்திட்டத்தில் உள்ளடக்கிய தொழில் பிரிவுகளில் சம்மந்தப்பட்ட தனியார் சிறு, குறு மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆப., அவர்கள் தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் திரு.சீனிவாசன், மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உதவி இயக்குநர் திருமதி.பரமேஸ்வரி, மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் திரு.சுரேஷ் குமார் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.