பள்ளி கல்லூரி அருகே டாஸ்மாக்:- அகற்ற கோரும் ஆர்.கே பேட்டை மக்கள்!

 திருத்தனி விநோத்,

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே பேட்டை வட்டத்தில், விளகனாம் புடி புதூர் பகுதியில் சாலையோரத்திலேயே அரசு மதுபானக்கடை இயங்கி வருகிறது.

  மேற்படி இந்த கடையில் சரக்கு வாங்கும் குடிகாரர்கள் பக்கத்தில் உள்ள பல பகுதிகளில் அமர்ந்து குடியும் கும்மாளமுமாக இருக்கிறார்கள். அவர்கள் அடித்தது போக காலி மதுபாட்டில்களை நிலத்தில் வீசுகிறார்கள்.

 போதையில் அக்கம் பக்கம் போகும் பெண்களை கேலி கிண்டல் செய்கிறார்கள்.

 அது மட்டுமீல்லீங்க இந்த மதுபானக்கடை சாலையில் முக்கிய திருப்பத்தில் உள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு குடிகாரர்கள் பெரும் சவாலாக அமைந்துவிடுகிறார்கள்.

 மேலும் அங்குள்ள பள்ளிக்கூடத்துக்கு சில நூறு மீட்டர் தொலைவிலேயே இந்த சரக்கு கடை அமைந்துள்ளது. கல்லூரி, டி.வி.எஸ். கம்பெனி, உள்ளிட்டவை அருகிலேயே உள்ளதால் மக்கள் மற்றும் மாணவர்கள் இன்னலுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள்.

 ஆகவே மேற்படி அரசு சரக்கு கடையை உடனடியாக இடம்மாற்றம் செய்ய வேண்டும் என மாணவர்களும் அப்பகுதி வாழ் மக்களும் கோரிக்கை வைக்கிறார்கள்.